search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் - வருகிற  27-ந்தேதி நடக்கிறது
    X

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் - வருகிற 27-ந்தேதி நடக்கிறது

    • பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.
    • ளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிய பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

    மேலும், விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும். வேளாண்- உழவா் நலத் துறை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×