search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்வு நாள் கூட்டம்"

    • 843 பேர் மனு அளித்தனர்
    • உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.

    கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை கேட்டு 843 பேர் மனு அளித்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதேபோல் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் 78 மனுக்களும், ஆரணி சப் -கலெக்டர் அலுவலகத்தில் 79 மனுக்களும் பெறப்பட்டன.

    இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 30-ந்தேதி நடக்கிறது
    • சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதிகாலை 10.30 மணிக்கு கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை, தோட்ட க்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்க ட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்கு வரத்து மற்றும் பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம்.

    • 21 மனுக்களில் தீர்வு காணப்பட்டது
    • ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதார்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த முறை வரப்பெற்ற 21 மனுக்களில் தீர்வு காணப்பட்ட 15 மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள 6 மனுக்கள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் பெறப்பட்ட 29 கோரிக்கை மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக மனுவின் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டரிந்தார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    இனிவரும் காலங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு சார்பு அலுவ லர்களை அனுப்பாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டு மென கலெக்டர் உத்தர விட்டார்.

    கூட்டத்தில் கருவூல மண்டல இணை இயக்குநர் சாந்தி மணி உள்பட ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 19-ந் தேதி கலெக்டர் வளர்மதி தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம். கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து. பால்வளம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகயும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 30-ந் தேதி நடக்கிறது
    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், ராணிப்பேட்டை, பாரதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.

    எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

    கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக் கள், மாற்றுத்திறனாளிகளி டம் இருந்து நேரடியாக மனுக் களை பெற்றார்.

    கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி, மின் சாரத் துறை சார்பான குறை கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்த னர். மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டது.

    அந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்கவும், மனு நிரா கரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்க ளுக்கு உடனடியாக தெரிவித் திட உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மைத் துறை நல அலுவ லர் முரளி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத். மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு கேட்டு ஏராளமான மனுக்கள் வந்தது
    • மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கெண்டு குறைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்தார்.நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 277 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டைமாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நாளை வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அள வில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×