search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

    • ராணிப்பேட்டையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 19-ந் தேதி கலெக்டர் வளர்மதி தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம். கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து. பால்வளம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகயும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×