search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது
    X

    விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது

    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.
    • வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் பங்கேற்று பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வருகிற 23-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 23-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதைத்தொடா்ந்து, விவசாயிகள் சங்கங்களில் இருந்து சங்கத்துக்கு ஒருவா் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்படும். ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×