search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் படைவீரர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூயம் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-3-2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • சிவகங்கையில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 15 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மனுதாரர்களுக்கு உரிய பதிலினை தெரிவிக்கும்படியும், அக்கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அம்மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்விற்குட்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் 35 முன்னாள் படைவீரர்களுக்கு திருமண மானியம், கண்கண்ணாடி மானியம் மற்றும் கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.6,74,900-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர்

    விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    எனவே முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் ‌‌.

    இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து பெயரினை பதிவு செய்து பயனடையலாம்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் படை வீரர்கள்மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    கைப்பேசி பழுது நீக்கு தல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தினால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது நீக்குதல், மின்சாரத்தி னால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் வருகிற 14- ந் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் பெய ரினை பதிவு செய்து பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
    • மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கினர்.

    இதில் 11 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திருமண மானியம், கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி மானியம் என 8 முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்களுக்கு ரூ.74 ஆயிரம் மதிப்பில் மானியத்தொகைக்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) குமரன், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுமுன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுஇயக்குநர் மணிவண்ணண் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×