search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படைவீரர்கள்-குடும்பத்தினருக்கு இலவச தொழிற்பயிற்சிகள்
    X

    முன்னாள் படைவீரர்கள்-குடும்பத்தினருக்கு இலவச தொழிற்பயிற்சிகள்

    • 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து பெயரினை பதிவு செய்து பயனடையலாம்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் படை வீரர்கள்மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    கைப்பேசி பழுது நீக்கு தல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தினால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது நீக்குதல், மின்சாரத்தி னால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் வருகிற 14- ந் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் பெய ரினை பதிவு செய்து பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×