search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fruits Vegetables"

    • வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது.
    • வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    * வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.

    * ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

    * சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.

    * வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.

    * மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

    * வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

    * பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

    * வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

    * உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது.
    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் "வெண்டைக்காய்" சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    வெண்டைக்காய் ஆங்கிலத்தில் 'லேடிஸ் ஃபிங்கர்ஸ்' என அழைக்கப்படுகிறது. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. வெண்டைக்காய் அதிகமாக சாப்பிட்டால், அதன் காம்பை போலவே நமது புத்திக் கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. வெண்டைக்காயில் சிறந்த மாவுச்சத்து பொருட்கள் உள்ளன. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதய துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இதில் உள்ளது.

    வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 % கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

    வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளியேறுதல் அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவம் சமைத்து சாப்பிட்டால் தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

    இதன் காய், இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றும், பிஞ்சுகளை நறுக்கி போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

    வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

    உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.

    உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.

    • காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள்.
    • பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

    உணவுக்கு காரமும், சுவையும் சேர்ப்பதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள். பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்சாந்தின் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பொருட்களும் உள்ளடங்கி இருக்கின்றன. பச்சை மிளகாய் உணவில் காரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டாலும் அதனை சாப்பிடுவதால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. பச்சை, சிவப்பு இவற்றில் எந்த வகை மிளகாய் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

    * பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறை எளிதாக நடைபெற உதவும். மேலும் குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * பச்சை மிளகாய் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை. அதேநேரத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணை புரியும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் நன்மை தரும்.

    * பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் பச்சை மிளகாய் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் கொண்டது.

    *பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டிருப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு. பச்சை மிளகாய் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு கவசமாக செயல்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    * சமையலில் சிவப்பு மிளகாய் தூள் சேர்ப்பது உணவின் சுவையையும், நிறத்தையும் மேம்படுத்தும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயின் ஊட்டச்சத்துக்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. சிவப்பு மிளகாயை உலர்த்தும்போது, அதில் உள்ள நீரின் அளவு குறைந்துவிடுகிறது.

    *சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். மனநிலையை மேம்படுத்தும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகவும் தூண்டும். மேலும் சிவப்பு மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது மற்ற வைட்டமின்கள் உடலில் போதுமான அளவு உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும் துணைபுரியும்.

    * சிவப்பு மிளகாயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சமீபத்திய ஆய்வுகளின்படி, ரத்த சர்க்கரையை குறைக்க சிவப்பு மிளகாய் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

    * இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் சிவப்பு மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் ரத்த உறைவை தடுக்கவும் செய்யும்.

    * சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் இரண்டுமே ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவற்றை முறையாக உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, பச்சை மிளகாய் எப்போதும் பச்சையாக பயன்படுத்தப்படுகிறது. பச்சையாகவும் சாப்பிடலாம். ஆனால் உலர்ந்த சிவப்பு மிளகாய் பெரும்பாலும் மசாலா பொருட்களுடன் கலக்கப்படுகிறது. சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது.

    • இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது.
    • பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும்.

    அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, சளி, இருமல், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், அறிகுறிகள் கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    யார் பழங்களை சாப்பிடலாம்?

    மலச்சிக்கல், சரும வறட்சி, வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற குறைபாடு போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் பழங்களை சாப்பிடலாம். ஏனெனில் பழங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.

    எப்படி சாப்பிட வேண்டும்?

    பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி வகைகளுடன் சேர்த்து பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும்.

    காலையில் பழங்கள் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் செரி மானம், சருமம், கூந்தல், வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை மேம்படும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் ஒவ்வொரு நபரின் உடல் வகையும், வளர்சிதை மாற்றமும் மாறுபடக்கூடும். அதற்கேற்பவே உணவு பழக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு வகையான நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாவுடன் வினை புரிவதை பொறுத்தே சம்பந்தப்பட்ட நபருக்கு நன்மை செய்யுமா? தீங்கு விளைவிக்குமா என்பது தெரியவரும்.

    ''பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலத்துடன் விரைவாக வினைபுரிந்துவிடும். ஆனால் காய்கறிகள், தானியங்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றுடன் நன்றாக கலக்காமல் செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகளை உருவாக்கிவிடும். அதனால் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளிலும், திசுக்களை உருவாக்கும் செயல்முறைகளிலும் பாதிப்பு ஏற்படலாம்'' என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    காலையில் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * உடல் நல பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். நமது உடல் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சுக்களை நீக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். அந்த சமயத்தில் நிறைய கொழுப்பு சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடுவது நச்சுக்களை நீக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

    * மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. காலை வேளையில் பழங்களை சாப்பிடும்போது அதில் இருக்கும் இயற்கையான சர்க்கரையானது வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும்.

    * காலையில் எழுந்த உடனேயே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். அதனை உட்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க தூண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கருப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும்.
    • சீசனின் போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன.

    தேங்காயை தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களை தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம். வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள் ஆபத்தானவை. செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை.

    கருப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். வேதிக்கற்கள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமான கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சினைகள் என பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் மாம்பழம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    மாம்பழத்தில் இருந்து வெளிவரும் வாசனையை வைத்து மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போல பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கருநிற கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களை தாராளமாக வாங்கலாம்.

    சீசனின் போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன. அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் 'கால்சியம் கார்பைடு' கற்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்தக்கற்களைப் பொடியாக்கி, ஸ்பிரே போலவும் உபயோகிக்கின்றனர். இந்த ஸ்பிரேக்கள் அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும். எனவே மிக கவனமாக பார்த்து மாம்பழங்களை வாங்க வேண்டும்.

    இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள், குறைந்த அளவுக்குத்தான் மாங்காய்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டே நாட்களில் மாங்காய்கள் பழுத்துவிடும். பச்சையாக, கடினமான காயாக இருந்தால் பழுக்க இரண்டு நாட்கள் தேவைப்படும். சற்றுப் பழமாக இருந்தால் ஒரு நாள்போதுமானது.

    • கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    • வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.

    கிர்ணி பழத்தின் (Rock Meelon) ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதி ஊட்டச்சத்து நிறைந்தது. கிர்ணி பழங்களில், உயிர்ச் சத்து ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

    சாறு நிறைந்த கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதை உட்கொள்வதால் அழகான சருமம் கிடைப்பதுடன் பார்வைத்திறனும் மேம்படும். வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.

    அமெரிக்காவின் கான்சஸ் மாநில பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை 2003-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, உயிர்ச்சத்து 'ஏ' மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக, கிர்ணி பழத்தின் மூலம் இத்தகைய பாதிப்புகள் கட்டுப் படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டன.

    கிர்ணி பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித் திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

    மிக மிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்புடைய, நன்கு பலனளிக்கக்கூடிய பழமாக கிர்ணி பழம் விளங்குகிறது.

    சாறு நிறைந்த இதன் சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்றுக் கோளாறுகளைக் குறைக்க முடியும்.

    கவனம் தேவை

    வெட்டிய உடனே கிர்ணி பழத்தைச் சாப்பிட்டுவிட வேண்டும். கிர்ணி பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால், பழம் சீக்கிரம் கெட்டுவிடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.

    வெவ்வேறு பழங்கள்

    கிர்ணி பழத்தில் பலவிதமான வகைகள் இருக்கின்றன. மஸ்க் மிலான் மற்றும் ராக் மிலான்... இவை இரண்டுமே கிர்ணி பழங் களாகவே அறியப்படுகின்றன. சுவையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் உருவமும், நிறமும் மட்டுமே இவை இரண்டுக்கும் இடையில் சில வேறுபாடுகளை உண்டாக்குகின்றன.

    ராக் மிலான், அளவில் சிறியதாக இருக்கும். அதேபோல வெளிப்புற தோல் பகுதி பச்சை நிறம் கலந்திருக்கும். ஆனால் மஸ்க் மிலான், அளவில் பூசணி போல பெரியதாக இருக்கும். அதன் தோல் பகுதியானது, ஆரஞ்சு கலந்த பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது.
    • பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

    ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும். பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

    வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது. பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

    பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு சற்று அதிகம். வாழைப்பழத்தில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

    நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை போன்ற வாழை வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் சாப்பிடலாம். பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழ வகைகளை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த கொதிப்பை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
    • பாகற்காயில் உள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

    கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

    * பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

    * குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.

    * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

    * சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

    * பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற பிளோவனாய்டுகள் இதில் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிகஅளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.

    * ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.

    * வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

    பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

    • பலாப்பழ கொட்டைகளில் இரும்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
    • பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது.

    பலாப்பழத்தை போலவே அதன் கொட்டைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை. அதிலிருக்கும் தையமின் மற்றும் ரிபோ பிளேவின் போன்றவை சருமம், கண்கள், கூந்தலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த துணைபுரிகின்றன. சாப்பிடும் உணவுகளில் பாக்டீரியாக்கள் மூலம் பரவும் மாசுவை தடுக்கவும் உதவுகின்றன. செரிமான பிரச்சினைகளை போக்கும் தன்மை கொண்ட இவை பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்கும் பலாப்பழ கொட்டைகள் உதவுகின்றன.

    குளிர்ந்த பாலில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டைகளை சிறிது ஊற வைத்துவிட்டு விழுதாக அரைத்து சருமத்தில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் சரும சுருக்கம் நீங்கும்.

    சரும பளபளப்புக்கும் பலாப்பழ கொட்டைகளை பயன்படுத்தலாம். பலாப்பழ கொட்டைகளை சிறிதளவு பால் மற்றும் தேனில் ஊறவைத்து அரைத்து பசைபோல் ஆக்கி, முகத்தில் தடவி உலர வைத்து வெது வெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும்.

    பலாப்பழ கொட்டைகளில் புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதற்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க செய்வதிலும், கூந்தலின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது.

    பலாப்பழ கொட்டைகளில் இரும்பு சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. அது அன்றாடம் நமது உடலுக்கு தேவைப்படும் இரும்பு சத்தின் அளவை ஈடு செய்யும் தன்மை கொண்டது. மேலும் ரத்த சோகை மற்றும் ரத்தம் சார்ந்த நோய் பாதிப்பில் இருந்தும் காக்க உதவும். மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும்.

    பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. அது பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும். மாலைக்கண் பாதிப்பு வராமலும் காக்கும். முடி உதிர்வும் கட்டுப்படும்.

    ஜீரண கோளாறு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அளவோடு பலாப்பழ கொட்டைகளை சாப்பிடலாம். அதனை வெயிலில் நன்கு உலர்த்தி தூளாக்கி வேகவைத்து சாப்பிடலாம். இது மலச்சிக்கலை போக்கும்.

    பலாப்பழ விதைகளில் உயர்தர புரதங்களும் உள்ளன. அவை தசைகளின் வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகின்றன.

    பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.
    முட்டைக்கோஸ்

    முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

    ப்ராக்கோலி

    கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக்  அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

    மாதுளை

    மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

    வாழைப்பழம்

    சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

    அன்னாசிப்பழம்

    அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

    முட்டை

    முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

    மஞ்சள்

    சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
    குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.
    லிச்சி பழம் கோடைகால சரும பிரச்சினைகள் முதல் எடை இழப்பு வரை பெரிய பங்கு அளிக்கிறது. இந்த லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம்.

    லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.

    கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    எனவே ரத்த சோகையை போக்க உதவி செய்யும். சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.

    உடல்​ எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது.

    இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை தடுக்க லிச்சி பழம் உதவுகிறது.
    வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
    வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

    வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

    வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.

    ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

    அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

    சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

    நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.
    ×