search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire"

    • தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    கரூர்

    கரூர் நடையனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 55). இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் ஏராளமான தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

    • லாரி தீயில் எரிந்து நாசம் ஆனது.
    • சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்தது

    கரூர்

    வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பத்மசேகர் (வயது50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காட்பாடி நோக்கி மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார். அந்த லாரி கரூர் மாவட்டம் புகழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மசேகர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பாலக்கரை இட்லி கடையில் திடீர் தீ விபத்து
    • போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி பாலக்கரை வைக்கோல் மேட்டு தெருவில் இட்லி கடை நடத்தி வருபவர் கருணை மணி (32). இன்று காலை வழக்கம் போல் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது சிலிண்டர் தீர்ந்து விட்டது. இதனால் கருணைமணி புதிய சிலிண்டரை மாற்றியுள்ளார்.புதிய சிலிண்டர் மாற்றிய போது அதில் உள்ள வால்வு செயலிழந்து சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து திடீரென சிலிண்டர் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.எதிர்பாராத விதமாக சிலிண்டர் தீப்பிடித்ததால் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் கடையை விட்டு வெளியில் ஓடினர். இது குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகே வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளிட்ட அலுவலகங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பாலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    • மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது.
    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தெற்கு மாசி வீதியில் நேற்று பிளாஸ்டிக் கடை மற்றும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    இந்த தீயை அணைக்க 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வாக–னங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட் டது.

    இதைக்கண்ட பொதுமக் கள் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இதுபோன்று தீ விபத்துகள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவ–தாக தெரிவித்து வந்தனர். மேலும் குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வசந்த ராயர் மண்ட–பத்தில் ஏற்பட்ட தீ விபத் துக்கு பின்னர் இது போன்ற தீ விபத்துகள் நடைபெறு–வதால், மதுரை–யில் பெரும் அசம்பாவிதம் நடைபெறுமா என்ற அச்சத்தில் ஆன்மீகவா–திகள், பொதுமக்கள் இருக் கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் சமூக ஆர்வலர் நாகேந்திரன் தக–வல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக மதுரை மாவட்டத் தில் நடைபெற்ற தீ விபத்து குறித்து தகவல் கேட்டு இருந்தார். அதற்காக தீய–ணைப்புத் துறைகளால் கொடுக்கப்பட்டுள்ள தக–வல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடை–பெற்று இருப்பதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தீயணைப்புத்துறையினரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 நிறுவ–னங்கள் மட்டுமே தீயணைப் புத்துறையினர் மூலம் தடை–யில்லா சான்றிதழ் பெற்றுள் ளனர் என்றும், ஆனால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவி–லைச்சுற்றி நடைபெற்ற தீ விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாநக–ரில் உள்ள 50 ஆண்டு முதல் நூறு ஆண்டுகள் வரையி–லான பழமையான கட்டிடங் களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு 95 சதவீதம் முறையான ஆவ–ணங்கள் இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

    வரும் காலங்களில் பழ–மையான கட்டிடங்களை உரிய முறையில் தணிக்கை செய்து தீ விபத்துக்களை தடுக்க உறுதியான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டின் 365 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஏராளமான சித்தர்கள் இங்கு வாழ்ந்து வந்ததால் அந்த பகுதி சித்தர் பூமியாகவும் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாவடி கருப்பசாமி கோவில் 5-வது பீட்டில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

    கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் மலை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மூங்கில் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியது.

    காட்டுத்தீ வேகமாக அடுத்தடுத்த இடங்களில் பரவியது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    3 ஆயிரம் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மலையிறங்க வனத்துறையினர் தடை விதித்து கோவிலிலேயே தங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும் சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமயில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் நாவலூத்து பகுதியில் இன்று 2-வது நாளாக காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருகிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பு இல்லை எனவும், 2-வது நாளாக பக்தர்கள் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4-வது நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக் தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை இருந்தும், வனத்துறையினர் சோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கும் கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    • வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர்.
    • சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவரும், இவரது அண்ணன் தம்பிதுரை ஆகிய 2 பேரும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் செய்யும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென இவரது கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென கொளுந்து விட்டு எறிந்தது.

    இது குறித்து திண்டி வனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்புத் துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் கருகி முற்றிலும் சேதமானது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பரமேஸ்வரி (23) பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார். பின்னர் பரமேஸ்வரி தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

    ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு குமார் மற்றும் அவரது குடும்பத்தினா் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைத்து பார்த்தனர். ஆனாலும் ஸ்கூட்டர் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், தொடர்ந்து விசாரணை நடத்தியும் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சங்க அலுவலகம் தீப்பற்றி எரிந்து நாசமானது
    • அரை மணி நேரம் போராடி அணைத்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் உள்ளே வரும் நுழைவு பகுதி அருகே மாவட்ட தலைமை சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்துக்கு கீற்றுக்கொட்டகையிலான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரை நேற்று காலை திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அலுவலகத்தில் உள்ளே இருந்த வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்ததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் உடனடியாக இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தொிவித்தனர். அதன்பேரில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீற்று கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் நாற்கரச்சாலை அருகில் உள்ள தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. தற்போது பருவக்காற்று அதிகமாக வீசுவதால் தீயின் வேகம் அதிகரித்து மளமளவென அருகில் உள்ள தோட்டங்களில் 5 ஏக்கருக்கு மேல் பரவியதால் அப்பகுதி தனியார் நிறுவன காவலாளி சங்கர்ராஜ் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள தோட்டங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    • வேலாயுதம்பாளையம் அருகே தென்னை மரங்களில் திடீரென தீ பிடித்தது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40). இவரது தோட்டம் அருகாமையில் உள்ள வெள்ளதாரையில் தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்னை மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அரவிந்த் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தீயணைக்க முடியவில்லை. காற்றின் காரணமாக தீ மள மள வென வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது. இது குறித்து உடனடியாக அரவிந்த் புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்னைமரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இதனால் தீ பக்கத்து தோட்டங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    • உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலை உள்ளது. இங்கு பனியன் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • மரக்கடையின் முதல் தளத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது.
    • உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதும் தீப்பிடித்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலை மீஞ்சூர் செல்வ மஹால் அருகில் அமைந்துள்ள பிளைவுட் மரக்கடையின் முதல் தளத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது.

    தீயானது மெதுவாக கீழே உள்ள மரக்கடைக்குப் பரவியது. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதுமாக தீப்பிடித்தது.

    தகவலறிந்து அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வாகனம், வல்லூர், பொன்னேரி, எண்ணூர், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

    தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் மரங்கள் எரிந்து நாசமாயின.

    பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், தாசில்தார் செல்வகுமார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×