search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் முன்னாள் தி.மு.க. கவுன்சிலரின்  அலங்கார பொருட்கள் விற்பனை கடைக்கு தீ வைப்பு? ரூ.8 லட்சம் சேதம்
    X

    கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    திண்டிவனம் முன்னாள் தி.மு.க. கவுன்சிலரின் அலங்கார பொருட்கள் விற்பனை கடைக்கு தீ வைப்பு? ரூ.8 லட்சம் சேதம்

    • வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர்.
    • சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவரும், இவரது அண்ணன் தம்பிதுரை ஆகிய 2 பேரும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் செய்யும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென இவரது கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென கொளுந்து விட்டு எறிந்தது.

    இது குறித்து திண்டி வனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்புத் துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் கருகி முற்றிலும் சேதமானது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×