search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இட்லி கடையில் திடீர் தீ விபத்து
    X

    இட்லி கடையில் திடீர் தீ விபத்து

    • திருச்சி பாலக்கரை இட்லி கடையில் திடீர் தீ விபத்து
    • போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை வைக்கோல் மேட்டு தெருவில் இட்லி கடை நடத்தி வருபவர் கருணை மணி (32). இன்று காலை வழக்கம் போல் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது சிலிண்டர் தீர்ந்து விட்டது. இதனால் கருணைமணி புதிய சிலிண்டரை மாற்றியுள்ளார்.புதிய சிலிண்டர் மாற்றிய போது அதில் உள்ள வால்வு செயலிழந்து சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து திடீரென சிலிண்டர் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.எதிர்பாராத விதமாக சிலிண்டர் தீப்பிடித்ததால் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் கடையை விட்டு வெளியில் ஓடினர். இது குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகே வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளிட்ட அலுவலகங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பாலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×