search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள்
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ராமராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து (பழைய படம்).

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள்

    • மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது.
    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தெற்கு மாசி வீதியில் நேற்று பிளாஸ்டிக் கடை மற்றும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    இந்த தீயை அணைக்க 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வாக–னங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட் டது.

    இதைக்கண்ட பொதுமக் கள் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இதுபோன்று தீ விபத்துகள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவ–தாக தெரிவித்து வந்தனர். மேலும் குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வசந்த ராயர் மண்ட–பத்தில் ஏற்பட்ட தீ விபத் துக்கு பின்னர் இது போன்ற தீ விபத்துகள் நடைபெறு–வதால், மதுரை–யில் பெரும் அசம்பாவிதம் நடைபெறுமா என்ற அச்சத்தில் ஆன்மீகவா–திகள், பொதுமக்கள் இருக் கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் சமூக ஆர்வலர் நாகேந்திரன் தக–வல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக மதுரை மாவட்டத் தில் நடைபெற்ற தீ விபத்து குறித்து தகவல் கேட்டு இருந்தார். அதற்காக தீய–ணைப்புத் துறைகளால் கொடுக்கப்பட்டுள்ள தக–வல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடை–பெற்று இருப்பதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தீயணைப்புத்துறையினரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 நிறுவ–னங்கள் மட்டுமே தீயணைப் புத்துறையினர் மூலம் தடை–யில்லா சான்றிதழ் பெற்றுள் ளனர் என்றும், ஆனால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவி–லைச்சுற்றி நடைபெற்ற தீ விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாநக–ரில் உள்ள 50 ஆண்டு முதல் நூறு ஆண்டுகள் வரையி–லான பழமையான கட்டிடங் களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு 95 சதவீதம் முறையான ஆவ–ணங்கள் இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

    வரும் காலங்களில் பழ–மையான கட்டிடங்களை உரிய முறையில் தணிக்கை செய்து தீ விபத்துக்களை தடுக்க உறுதியான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×