search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fines"

    • போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி பலர் விவசாயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆடு, மாடுகள் வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கிழக்கு கடற்கரை சாலையிலேயே இரவு, பகலாக திரிகின்றன. பெரும்பாலும் மாடுகளே அதிகளவில் கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

    நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் இந்த மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். இது குறித்து தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாடுகளின் உரிமையாளர்கள் நாளை (10-ந் தேதி)-க்குள் தங்களது மாடுகளை பிடித்து கட்ட வேண்டும். தவறினால் 11-ந் தேதி முதல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    • 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாலசேகர், பாசில், குணதீபன்(பயிற்சி) ஆகியோரை கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். தொடர்ந்து எஸ்.வி. பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    • அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, பகல் கொள்ளையாக இருக்க கூடாது என முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • இளைய சமுதாயத்தின் மீதான பொருளாதார சுரண்டல் எனவும் கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், 4 சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

    சட்டம் மக்களை பாதுகாக்கத் தான். ஆனால் மக்களுக்கான பாதுகாப்பு சட்டம், தற்போது மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் வேதனை குரலை இளைஞர் சமுதாயம் எழுப்பி வருகிறது.

    தமிழகத்தில் ஏறக்குறைய 2½ கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இந்த 2½ கோடி இருசக்கர வாகனத்திற்கும் இந்த அரசு அபதாரம் விதிக்குமோ? இது மறைமுக பொருளாதார சுரண்டல் இல்லையா?

    இளைஞர்களை முடக்கும் வேலையா? அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அது பகல் கொள்ளையாக இருக்க கூடாது.

    இளைய சமுதாயத்தில் நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டிய அரசு, இன்றைக்கு வாகன விதிமீறல் என்று சொல்லி அபாண்டமாக பொருளாதார சுரண்டலை இளைய சமுதாயத்தின் மீது ஏவி இருக்கிற மிகப்பெரிய தாக்குதலை நிறுத்த வேண்டும்.

    ஆகவே இந்த அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும். அரசின் நடவடிக்கையில் மனித நேயம் இருக்க வேண்டும். நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும்.

    அரசு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கட்டும். ஆனால் அது அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர அபாயகரமான கட்டணமாக இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 72 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட் பெற்று இயங்குகிறதா? என்றும் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதில் கடந்த மாதத்தில் விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கும், 72 ஆட்டோக்களுக்கும், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், அரசு விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 6 சாலை விதிகளை மீறிய 266 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஆய்வு செய்ததில் 5 பேர்களிடம் இருந்து தலா 100 முதல் 500 ரூபாய் வசூலிக்க பட்டது.
    • சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் , சுப்பிரமணியன், கோட்டையன் , பிரகாஷ், அருண்குமார், தினகரன் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் கடைவீதிகளில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி சுகாதார துணை இயக்குனர் ஆணைப்படி திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம் இருவேல்பட்டு அரசு மருத்துவமனை மூலம் நேற்று பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் நபர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் உள்ளனவா என்பது குறித்து மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் மருத்துவர் சுனிதா, திருவெண்ணெய்நல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    மேலும் திருவெண்ணெ ய்நல்லூர் பகுதியில் ஆய்வு செய்ததில் 5 பேர்களிடம் இருந்து தலா 100 முதல் 500 ரூபாய் வசூலிக்க பட்டது. இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் , சுப்பிரமணியன், கோட்டையன் , பிரகாஷ், அருண்குமார், தினகரன் கலந்து கொண்டனர். இதேபோல் மடப்பட்டு கடை வீதிகளில் திருநாவலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், குமார், கோபி ஆகியோர் பொது இடங்களிலும், கடைகளில் புகையிலை விற்றல், புகைப்பிடித்த நபர்களிடம் இருந்து 1500 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

    • பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
    • அரசு, பொதுத்துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய்த் தொற்றுபரவலை தடுக்கும் விதமாக, அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும்.

    அரசு, பொதுத் துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியா ளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிா்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

    பஸ்கள், அனைத்து விதமான வியாபார கடைகள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள், திருமண மண்டபங்களில் நிகழும் திருமணம், காது குத்துதல், இதர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முகக்க வசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • இப்போது அவர்களுக்கு அபராத வசூல் சீட்டு தரப்படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 32 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எனவே மதுரையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக "மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்" என்று மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதற்காக மதுரையின் 5 மண்டலங்களிலும், 15 குழுவினர் அதிரடி அபராத வசூல் வேட்டையில் ஈடு பட்டு வருகின்றனர்.

    மதுரை மாநகரில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த தாக 100 பேரிடம் 32,400 ரூபாய் அபராதம் வசூலிக்க ப்பட்டு உள்ளது.அதேபோல தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் மற்றும் கொரோனா விதி முறை களை கடைபிடிக்க தவறியதாக 62 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.21,300 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் வருவாய்த்துறை அதி காரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை 12 மணி நேர நிலவரப்படி, சுமார் 50 பேரிடம் முகக்கவச அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் முன்பு முகக்கவசம் அணியாமல் திரியும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கு அபராத வசூல் சீட்டு தரப்படவில்லை. எனவே அவர்கள் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருந்த போதிலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    • விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத 3 செயற்பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால்,தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெறவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம், விராட்டி குப்பம்பாதையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தமிழ்நாடு மின்வாரி யத்தில்விழுப்புரம் மாவட்ட த்தில்விவசாயமின் இணைப்புக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் முழு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து ள்ளது. இதனிடையே, மின் இணைப்பு வழங்காமல் 10.10.2019ம் தேதி வரை காத்திருப்பில் உள்ளவர்கள் பட்டியல் குறித்து தகவல் தெரிவிக்குமாறுதகவல் உரிமைபெறும் சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019ம் தேதி ராேஜந்திரன் விண்ணப்பி த்தார். ஆனால் அதிகாரிகள் கேட்கப்பெற்ற தகவல்களை தரவில்லை.

    இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விவசாயி ராஜேந்திரன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின் பகிர்மான வட்ட செய ற்பொறியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தகவல் வழங்க மறுத்து உள்ளது உறுதி செய்யப்பட்டது. காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால்,தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒருவார காலத்திற்குள் அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம் இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர்கள் நஷ்ட ஈடாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும் தகவல்உ ரிமை பெறும் சட்டபிரிவு 20(1)ன்படி நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம்ஏன் விதிக்கக்கூடாது என்று என்பதற்கான விளக்கத்தை நேரில்ஆஜராகி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கவேண்டும் எனமாநிலதகவல் ஆணையர் தமிழ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும் சேலத்தில் உள்ள தனியங்கி காமிராக்கள் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.
    • அதன்படி விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 15 நாளில் 10ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் கோடா உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.

    10 ஆயிரம் வழக்கு

    அதன்படி விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 15 நாளில் 10ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே ஆன்லைனில் அபராதம் செலுத்தாத 1500 பேரிடம் அபராதம் வசூல் செய்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைத்தது.

    சேலம் 5 ரோடு சந்திப்பில் விதி மீறி தொடர்ந்து வாகனம் இயக்கியதால் 119 முறை அபராதம் விதிக்கப்பட்ட நபர் அதனை செலுத்தாமல் இருந்தார். அவரை போலீசார் வாகன தணிக்கையின் போது பிடித்து 12 ஆயிரத்து 900 ரூபாயை வசூலித்தனர்.

    அதிக அபராதம்

    அந்த நபர் தமிழகத்திலேயே அபராதமாக அதிக தொகை செலுத்திய 2-வது நபர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் விதி மீறுவோர் போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும் சேலத்தில் உள்ள தனியங்கி காமிரா க்கள் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.

    இதனால் வாகன ஓட்டிகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறை–களை கடை பிடித்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஹெல்மெட் அணியாததால் ஆன்லைன் மூலம் 16 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு துணை கமிஷனர் மாடசாமி தகவல் தெரிவித்தார்.
    • கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் சேலம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட ஏ.வி.ஆர், 5 ரோடு,சேலம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களுக்கு முகாமில் வைத்து விபத்து வீடியோ மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. 16 நாட்கள் நடத்த இந்த சிறப்பு முகாமில் 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ஒரே ஒரு வாலிபர் மட்டும் ஹெல்மெட், ஓவர் ஸ்பீடு மூலம் ஒரு ஆண்டில் 120 முறை ஆட்டோமெட்டிங் கேமரா மூலம் ரூ.12 ஆயிரத்து 900 கட்டி உள்ளார். முதல் தடவை அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு துணை கமிஷனர் மாடசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

    கரூர்:

    புகழூர் நகராட்சிக்குட்பட்ட பிரியாணி, டிபன், பழம், பலகாரம், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நகராட்சி துப்புரவு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த

    சுமார் 50 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    • குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மாதவன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 50 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் கடை உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் அருகில் இருந்த மலைச்சாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    அவற்றையும் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ×