search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களுக்கு"

    • 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
    • அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கை செய்தார்.

    அப்போது 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அந்த 15 வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகை மற்றும் சாலை வரியாக ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதர வாகனங்களுக்கு சாலை வரியாக ரூ.65 ஆயிரத்து 300-ம், இணக்க கட்டணமாக ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த தகவலை ராசி புரம் மோட்டார் வாகன ஆய்வா ளர் நித்யா தெரிவித்தார்.

    • 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தினர்.
    • மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை, திருப்பூரில் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் வாடகை வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சில தினங்களுக்கு முன்பு பல இடங்களில் சோதனை நடத்தினர்.மொத்தம் 462 வாகனங்களை சோதனையிட்டதில் 13 பள்ளி வாகனங்கள், 33 ஆட்டோக்கள், 17 மேக்ஸி கேப், 23 டாக்சிகள் என மொத்தம் 115 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆட்டோவில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எனில் 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர். 12 வயதுக்கு அதிகமாக குழந்தைகள் எனில் 3 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல மேக்ஸி கேப் வாகனத்தில் 12 வயதுக்கு கீழ் இருந்தால் 12 பேரும், 12 வயதுக்கு மேல் இருந்தால் 18 பேர் வரையும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.பள்ளி வாகனங்களை பொருத்த வரை இருக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையானது மாறும்.

    இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்களை ஏற்றி சென்றதற்காக 115 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.3.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்வதாகவும், மேலும் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறுகள் ஏற்படுத்தியும் வந்தனர்.

    இதனால் இந்த பகுதி களில் அடிக்கடி விபத்து க்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் இது குறித்து பொதுமக்கள் அந்தியூர் போக்குவரத்து போலீசாரி டம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வாகன உரி மையாளர்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களில் நிறுத்தி விட்டு வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நில வியது.

    • சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 72 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட் பெற்று இயங்குகிறதா? என்றும் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதில் கடந்த மாதத்தில் விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கும், 72 ஆட்டோக்களுக்கும், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், அரசு விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 6 சாலை விதிகளை மீறிய 266 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×