search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled"

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு அவசியம் என்பதினால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விரைவில் தேசிய அடையாள அட்டைநகல் (நீலநிறம்), ஆதார் நகல், புகைப்படம் -1.

    மேலும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எவரேனும் நேரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • காரைக்குடி தொகுதியில் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.51.75 லட்சம் மதிப்பீட்டில் காரைக்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள்,நாற்காலிகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்.

    சாக்கோட்டை ஒன்றியம் சாக்கவயல் உயர்நிலைப் பள்ளி,சாக்கோட்டை சிறுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்குடிகழனிவாசல் நகர்மன்ற நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி வ.உ.சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி ராமநாதன் செட்டியார் தொடக்கப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை ப்பள்ளி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, முத்துப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தலா ரூ. 9.75 லட்சம் மதிப்பிலும் டெஸ்க்,பெஞ்சுகளை வழங்கினார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது காந்திபுரம் முதலாவது வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் மெய்யர்,காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி,நகர செயலாளர் குமரேசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ்,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன்,நகர வர்த்தக காங் தலைவர் ஜெயப்பிரகாஷ், தொகுதி இளைஞரணி பொதுச்செயலாளர் பாலா,மாநில இளைஞர் காங் பொதுசெயலாளர் அருணா,தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மணி மற்றும் தலைமை

    ஆசிரியர்கள் ஆசிரியர்கள்,மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குடிநீா், மீனவா்கள் பிரச்சினைகளை தீா்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸ் பொறுப்பேற்று கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:-

    ராமநாதபுரத்தில் குடிநீா் பிரச்சினை, மீனவா்கள் பிரச்சினை உள்ளிட்டவற்றைத் தீா்ப்பதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மக்களைச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஊரகப் பகுதிகளின் வளா்ச்சிக்கான திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் வளரும் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் இடம் பெற்றுள்ளதால் கல்வி மேம்பாட்டுக்குரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    ராமநாதபுரத்தில் ெரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க ஆய்வு மேற்கொள்ளவும், சக்கரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் கழிவுநீா் பிரச்சினைக்கு தீா்வு காணவும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளு க்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் கலெக்டரை 24 மணி நேரமும் 94441-83000 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். புதிய கலெக்டருக்கு கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் மற்றும் வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

    • மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
    • மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்ற வர்களுக்குபல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசால் மாற்றுத்திற னாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் கட்டமாக கும்பகோணம், பூதலூர், சேதுபாவாசத்திரம் ஆகிய 3 ஒன்றியங்களில் 9 இடங்களில் நடைபெற உள்ளது.

    கும்பகோணம் ஒன்றியம் சோழன் மாளிகை முழையூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை மையத்தில் வருகிற 21-ந் தேதியும், தேவனேஞ்சேரி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் அடுத்த மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.

    பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 16-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24-ந் தேதியும், செங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-ந் தேதியும் நடைபெறுகிறது.

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகிய நாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 17-ந் தேதியும், பெருமக்களும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25-ந் தேதியும், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடுத்த மாதம் 1ஆம் தேதியும் முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்தறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    எனவே மேற்கூறிய மூன்று ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளை சேர்ந்த இதுநாள்வரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.
    • சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நேர்காணல் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள் நல சங்கம், தமிழ்நாடு மாற்றதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மணமகள் மற்றும் மணமகனை தேர்வு செய்தனர்.

    மாற்றுதிறனாளிகள் நல சங்க தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாற்று திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மசந்திரன், மாநில பொதுசெயலாளர் பொன்னுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பா.ஜ.க. தலைவருமான டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தன்னார்வலர்கள் நடத்தும் இந்த திருமண சுயம்வரம் நிகழ்ச்சியில் கால் மற்றும் கைகளை இழந்த மாற்று திறனாளிகள் செவித்திறன் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பொன்வாசுகிராம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோபி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் வாசுதேவ் நன்றி கூறினார்.

    ×