search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare programs"

    • குடிநீா், மீனவா்கள் பிரச்சினைகளை தீா்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸ் பொறுப்பேற்று கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:-

    ராமநாதபுரத்தில் குடிநீா் பிரச்சினை, மீனவா்கள் பிரச்சினை உள்ளிட்டவற்றைத் தீா்ப்பதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மக்களைச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஊரகப் பகுதிகளின் வளா்ச்சிக்கான திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் வளரும் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் இடம் பெற்றுள்ளதால் கல்வி மேம்பாட்டுக்குரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    ராமநாதபுரத்தில் ெரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க ஆய்வு மேற்கொள்ளவும், சக்கரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் கழிவுநீா் பிரச்சினைக்கு தீா்வு காணவும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளு க்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் கலெக்டரை 24 மணி நேரமும் 94441-83000 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். புதிய கலெக்டருக்கு கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் மற்றும் வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

    ×