search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled"

    • 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
    • முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    இதுநாள் வரை மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முகாம் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் எலும்பு முறிவு டாக்டர், காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர், மன நல மருத்துவர் மற்றும் கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மேற்படி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 57 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர்கள் வழங்கினர்.
    • முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 லட்சத்து 59 ஆயிரத்து 500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினர். பின்னர் அமைச்சர்கள் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களது முன்னேற் றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி மாற்றுத்தி றனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை, ெரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சரின் வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
    • முகாம் வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகள் அனைவருக்கும் பிரத்தியேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 7829 மாற்று திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் 20வது ஆண்டு விளையாட்டி போட்டி நடந்தது.
    • தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

     சென்னை:

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில 20-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். கருப்பையா முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பா.சிம்மசந்திரன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மாநில பொது செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், வாலிபால், டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • 125-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமில் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பாபநாசம் வட்டார வளமைய மேலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

    பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாமை தொடங்கி வைத்து 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார்.

    முகாமில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லா, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 75 மாற்றுத்தி றனாளி மாணவர்களும், 125 மாற்றுத்திறனாளி பெரியவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்று னர் சுதாகர் நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
    • இன்று முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

    சிறப்பு மருத்துவர்கள் குழு முகாமிற்கு வருகை தந்து மாணவர்களின் இயலாத் தன்மைக்கேற்ப மருத்துவச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், UDID அட்டை பதிவேற்றம் செய்தல் உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைத்தல், அறுவைச் சிகிச்சை பரிந்துரை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தல் போன்ற செயல்பாடுகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த முகாம் இன்று (24-ந் தேதி) விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், 27-ந் தேதி காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 31-ந் தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பிப்ரவரி 2-ந் தேதி திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

    7-ந் தேதி அருப்புக் கோட்டை சி.எஸ்.ஐ (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி சிவகாசி எ.வி.டி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், 16-ந் தேதி சாத்தூர் எட்வர்டு நடுநிலைப் பள்ளியிலும், 21-ந் தேதி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ந் தேதி வத்ராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி ஸ்ரீவில்லி புத்தூர் ஒன்றியம் ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.

    முகாமிற்கு வரும்பொழுது மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-8, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்-2, ஆதார் கார்டு அசல் மற்றும் நகல் - 2, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். மேலும் ஏற்கனவே தேசிய அடையாள அட்டை வைத்திருப்போர் அசல் மற்றும் அனைத்துப் பக்கங்களின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.

    இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறளாளி மாணவர்களும், பெற்றோர்களும் பயனடையலாம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
    • பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சுகாசினி தொடங்கி வைத்தார்.

    இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.

    இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
    • போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பொட்டேட்டோ கேதரிங், கலெக்டிங் தி பால்ஸ், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார்.


    • தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்தி றனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும்.
    • அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி திருக்கோ யிலுக்கு செலுத்தவேண்டிய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் மாற்றுத்தி றனாளி திருமணம் நேற்று நடைபெற்றது.

    தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன்படி நேற்று கும்பகோணம் தாலுக்கா, அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணப்பெண் தேவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த பிரபு என்பவருக்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

    அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோயில் துணை ஆணையர் உமாதேவி மணமக்களுக்கு பட்டுப் புத்தாடைகள், கோயில் பிரசாதங்கள் வழங்கினார்.

    நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் வருகின்ற 20-ந் தேதி மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, லக்காபுரம், அந்தியூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சென்னம்பட்டி ஆகிய இடங்களிலும்,

    21-ந் தேதி மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, கணபதிபாளையம், அந்தியூர் தாலுக்காவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பட்லூர் ஆகிய இடங்களிலும், 22-ந் தேதி மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, பொன்னம் பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, குருவரெட்டியூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அகில இந்திய அளவில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் என்பதினால் அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    • எழுமலையில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
    • விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மதுரை புறநகர் மாவட்ட 4 வது மாநாடு மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் ஜீவா, முத்துக்காந்தாரி, மாவட்டச் செயலாளர் முருகன், துணைத்தலைவர் தவமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ராஜா சங்கர் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் நாகராஜ், சின்னச்சாமி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டையை ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டையாக மாற்றித்தர வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு கூலியை முழுமையாக வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×