search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul dragons"

    சென்னையில் இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018 #DDvMP
    சென்னை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெற்றன.

    கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    குவாலிபையர்-1 ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

    இந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.

    இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களும், என் ஜெகதீசன் 43 ரன்களும், ஆர் விவேக் 54 ரன்களும் சேர்த்தனர்.



    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களம் இறங்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் மதுரை பாந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 19.3 ஓவரில் 128 ரன்னில் சுருண்டது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 9.1 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ஹரி நிஷாந்த் 31 பந்தில் 57 ரன்களும், ஜெகதீசன் 34 பந்தில் 43 ரன்களும் குவித்தனர்.

    அதன்பின் வந்த ஆர் விவேக் 25 பந்தில் 54 ரன்கள் குவித்தார். இந்த மூவரின் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    ‘லீக்‘ ஆட்டத்தின் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலி பையர்’ ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினமும், எலிமினேட்டர் ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்றும் நடைபெற இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இந்த இரண்டு ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன. அந்த இரண்டு ஆட்டங்களும் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 5 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராடும். திண்டுக்கல் அணி லீக் ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையில் உள்ளது.

    தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும், குவாலிபையர் 2 ஆட்டத்தில் விளையாடும்.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டமான எலிமினேட்டரில் கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். கோவை அணி ‘லீக்‘ ஆட்டத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது.

    ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நாளை நத்தத்திலும் இறுதிப் போட்டி 12-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

    லீக் ஆட்டங்கள் முடிவில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிகர ரன்-ரேட் (+0.992) அடிப்படையில் முதலிடம் பிடித்தது. மதுரை பாந்தர்ஸ் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.124) அடிப்படையில் 2-வது இடம் பெற்றது. கோவை கிங்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றதுடன், நிகர ரன்-ரேட் (+0.577) அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்தது. காரைக்குடி காளை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.505) அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 5-வது இடத்தையும், திருச்சி வாரியர்ஸ் 6-வது இடத்தையும், காஞ்சி வீரன்ஸ் 7-வது இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கடைசி இடத்தையும் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று (பிளே-ஆப்) ஆட்டத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 12-ந் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணி நத்தத்தில் 10-ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டில் 6-வது இடம் பிடித்து இருந்தது. இந்த சீசனில் அந்த அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் பெரும்பாலான ஆட்டங்களில் ஜெகதீசன் தான் அணியை வழிநடத்தினார். அவர் இதுவரை 3 அரைசதம் உள்பட 302 ரன்கள் குவித்துள்ளார். விவேக், ஹரி நிஷாந்த் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 சீசனிலும் ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளர் மற்றும் வீரர்கள் மாற்றத்தால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மதுரை பாந்தர்ஸ் அணியின் பேட்டிங்கில் அருண் கார்த்திக் (3 அரை சதம் உள்பட 307 ரன்கள்) முதுகெலும்பாக விளங்கி வருகிறார். தலைவன் சற்குணம், கவுசிக், ஷிஜித் சந்திரன் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை பாந்தர்ஸ் அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் இறுதிப்போட்டியை எட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது முழு பலத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 3 தடவையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த போட்டி குறித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள் தேர்வு முறை காரணமாக இந்த சீசனில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். நாங்கள் சிறந்த வீரர்களை தக்க வைத்தோம். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து காட்டினார்கள். சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்கிறோம். எங்கள் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. யார் குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பேற்று கொள்கிறார்களோ? அவர்கள் அணியை முன்னெடுத்து செல்கிறார்கள்’என்றார். திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணி நல்ல சமபலத்துடன் உள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். இது எங்களுக்கு சிறப்பான சீசன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தலைவன் சற்குணம் அளித்த பேட்டியில், ‘மிகவும் நேர்மறையான மனநிலையுடன் இந்த ஆட்டத்தை நாங்கள் அணுக வேண்டும். எதிரணியை வீழ்த்தி எங்களது மன உறுதியை நிரூபித்து காட்ட இது நல்ல வாய்ப்பாகும். அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் என்னால் நெருக்கடி இன்றி விளையாடுவதுடன் இயல்பான ஷாட்களை விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த முறை நான் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடினாலும், பொதுவான ஆட்டங்களில் மதுரை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். இந்த முறை மதுரை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது சவாலாக இருந்தது. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், விவேக், சதுர்வேத், அனிருத், முகமது, அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, தோதாத்ரி.

    மதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், கார்த்திகேயன், நாதன், கவுசிக், ஷிஜித் சந்திரன், அபிஷேக் தன்வார், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG#TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.

    ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். 

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 

    10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



    அடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது காரைக்குடி காளை அணி. #TNPL2018 #DDvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஜெகதீசன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த பால்சந்தர் அனிருத் சிறப்பாக ஆடி 53 ரன் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஆர்.விவேக் அதிரடியாக ஆடி 13 பந்தில் 5 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 42 ரன்கள் குவித்தார். இறுதியில், 
    கடைநிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    காரைக்கு காளை அணியின் அஷ்வத் முகுந்தன் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதித்யா மற்றும் ஸ்ரீகாந்த் அனிருதா இறங்கினர். இருவரும் திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். ஆதித்யா 49 ரன்னிலும், ஸ்ரீகாந்த் அனிருதா 43 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ராஜ்குமார் இறுதி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ராஜ்குமார் 41 ரன்களும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், காரைக்குடி காளை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. #TNPL2018 #DDvKK
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய் ஆட்டத்தில் திண்டுக்கல்-காரைக்குடி அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். #TNPL2018 #NammaOoruNammagethu
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளேஆப்” சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 20 “லீக்“ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

    காரைக்குடி காளை 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகளும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளும் பெற்றுள்ளன.

    திருச்சி வாரியர்ஸ் 4 புள்ளியுடன் (2 வெற்றி, 3 தோல்வி) இருக்கிறது. காஞ்சி வீரன்ஸ் 2 புள்ளியுடனும் (1 வெற்றி, 4 தோல்வி), நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளி எதுவும் பெறாமலும் (5 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

    டி.என்.பி.எல். போட்டியின் 21-வது லீக் ஆட்டம் நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும். இதனால் இரு அணிகளும் 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் உள்ளன.

    திண்டுக்கல் அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது. அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. மதுரை பாந்தர்ஸ் ( 9 விக்கெட்), கோவை கிங்ஸ் ( 8 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (7 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (4 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

    காரைக்குடி காளை அணி கோவை கிங்சை சூப்பர் ஓவரிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசை 47 ரன்னிலும், காஞ்சி வாரியர்சை 1 விக்கெட்டிலும் தோற்கடித்தது. டூட்டி பேட்ரியாட்சிடம் 11 ரன்னில் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுகல் டிராகன்ஸ் அணி மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் ராஜகோபால் சதீஸ் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திண்டுக்கல் அணியின் மோகன் அபினவ் 2 விக்கெட் வீழ்த்தினார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

    ஜெகதீசன் 31 ரன்கள், விவேக் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகம்மது ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் டூட்டி பேட்ரியாட்ஸ் மோதுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 14-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் (9 விக்கெட்), கோவை கிங்ஸ் (8 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (7 விக்கெட்) ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியது.

    இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஜெகதீசன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தொடக்க வீரரான அவர் 4 ஆட்டங்களில் 183 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். இவர் ஷாருக்கானை (208 ரன்) முந்தி முதல் இடத்தை பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்சையும் (48 ரன்) 2-வது ஆட்டத்தில் கோவை கிங்சையும் (11 ரன்) வென்றது. 3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிராக சதம் (111 ரன்) அடித்து முத்திரை பதித்து இருக்கிறார்.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் இறங்கினர்.

    முதலில் திண்டுக்கல் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் திணறினர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய மோகித் ஹரிஹரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். மோகித் 77 ரன்களுடனும், ரோகின்ஸ் 64 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து 167 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கால் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் சுண்டியதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்றது. இதையடுத்து, தனது அணி முதலில் பந்து வீசும் என திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, காஞ்சி வீரன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    ×