search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி
    X

    டிஎன்பிஎல் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் இறங்கினர்.

    முதலில் திண்டுக்கல் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் திணறினர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய மோகித் ஹரிஹரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். மோகித் 77 ரன்களுடனும், ரோகின்ஸ் 64 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து 167 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    Next Story
    ×