search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL2018"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.



    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி மற்றும் தினேஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சுவாமிநாதன் வீசிய 4-வது ஓவரில் கவுஷிக் காந்தி பாஃப்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடித்திருந்தார்.

    அடுத்து, தினேஷ் 16 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுவாமிநாதன் வீசிய பந்தில் பௌல்டு ஆகி வெளியேறினார். சுப்ரமணியம் ஆனந்த் 32, நிதிஷ் ராஜகோபால் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஜகோபால் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அதன்பின், அபிஷேக் 7, ரங்கராஜன் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினாலும், சதீஷின் சிறப்பான ஆட்டத்தினால், 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ராஜகோபால் சதீஷ் 57 ரன்களுடனும், கனேஷ் மூர்த்தி ஒரு ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    காரைக்குடி காளை அணியின் சுவாமிநாதன் 3 விக்கெட்டுக்களையும், யோ மகேஷ், பாஃப்னா, ராஜ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். ராஜகோபால் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    இன்றைய போட்டியில் 18.4 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 165 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த டூட்டி பேட்ரியாட்ஸ் 19.2 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியதால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG#TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 25-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.

    ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். 

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 

    10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



    அடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. #TNPL2018 #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.

    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர், 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் பரத் ஷங்கர் மற்றும் மணி பாரதி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். கனேஷ் வீசிய 8-வது ஓவரில் மணி பாரதி 26 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த பரத் ஷங்கர், 51 ரன்களில் கனேஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் குமார் ரன் அடிக்காமலேயே வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா இந்திரஜித்தும், கனபதியும் அதிரடியாக விளையாடினர்.

    இதனால், 19 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்து ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 50 ரன்கள், கனபதி 27 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் கனேஷ் 2 விக்கெட்டுக்களையும், ரங்கராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    சிறப்பாக விளையாடி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாபா இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #TPvTW
    வீரர்கள் தங்களது திறமையை முழுவதும் வெளிப்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் முருகன் அஸ்வின் தெரிவித்துள்ளார். #CSGvKK #TNPL2018
    சென்னை:

    டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காரைக்குடி காளையிடம் தோற்றது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

    கேப்டன் அனிருதா 28 பந்தில் 56 ரன்னும் (4 பவுண் டரி, 4 சிக்சர்), ஷாஜகான் 20 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), பாப்னா 23 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி) எடுத்தனர்.

    அருண், ஹரீஷ் குமார் தலா 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் காரைக்குடி காளை அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் கோபிநாத் அதிகபட்சமாக 38 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), முருகன் அஸ்வின் 24 பந்தில் 33 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். யோமகேஷ், மோகன் பிரசாத், ராஜ்குமார், லட்சுமணன், பாப்னா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 3-வது தோல்வியாகும். திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகளிடம் ஏற்கனவே தோற்று இருந்தது. இந்த தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் முருகன் அஸ்வின் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்குடி காளை அணியின் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் அவரை ‘பவர் பிளேயில்’ கட்டுப்படுத்த வேண்டும் என்று கருதினோம். அவர் மித வேகப்பந்து வீச்சில் நன்றாக ஆடுவார் என்பதால் தொடக்கத்திலேயே சுழற் பந்து வீரர்கள் பந்து வீசினோம். ஆனால் இந்த திட்டம் எடுபடவில்லை.

    அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஒருவேளை எங்கள் திறமையை முழுமையாக வெளிக்காட்டி இருந்தால் ஆட்டத்தின் போக்கை நிச்சயம் மாற்றி இருப்போம்.

    எங்களது பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. பந்து வீச்சு நேர்த்தியுடன் இல்லை.

    தொடர் தோல்விகளில் இருந்து முழுமையாக மீண்டு அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முழு முயற்சி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது ஆட்டத்தில் கோவை கிங்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் நடக்கிறது.

    காரைக்குடி காளை அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 4-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 27-ந்தேதி எதிர் கொள்கிறது.

    இன்று 2 ஆட்டங்கள் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை 2-வது வெற்றிக்காக பெற காத்திருக்கிறது. தூத்துக்குடி ஹாட்ரிக்‘ வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. திண்டுக்கல் அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.#CSGvKK #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvVKV
    திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் விஷால் 34 பந்தில் 40 ரன்களும், சஞ்சய் யாதவ் 13 பந்தில் 27 ரன்களும் குவித்தனர். காரைக்குடி காளை அணி தரப்பில் லக்‌ஷ்மன் மற்றும் மோகன் பிரசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பறினர்.

    இதைத்தொடர்ந்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணியின் ஆதித்யா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆதித்யா 7 பந்துகளில் 5 ரன்களுடன் அஷ்வந்த பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.



    இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மான் பாஃப்னா 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் சாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். எனினும், மறுமுனையில் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் அதிரடி ஆட்டம் ஆடவே காரைக்குடி காளை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 

    இதனால், காரைக்குடி காளை அணி 16.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

    அந்த அணியில், ஸ்ரீகாந்த் 49 பந்துகளில் 7 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 93 ரன்களும், ஸ்ரீநிவாசன் 19 பந்துகளில் 19 ரன்களும் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    காஞ்சி வீரன்ஸ் தரப்பில் அஷ்வந்த் மற்றும் சுனில் சாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர். 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அனிருதா ஸ்ரீகாந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #KKvVKV
    ×