என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Diets"
- உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
- உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம்.
40 வயதை தாண்டிய பெண்களா நீங்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு முதலில் பெண்கள் 40 வயதை தாண்டியவுடன் உடல் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
40 வயதிற்கு மேல் உடலை அழகாக வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்க கூடாது. உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? என்று எல்லோரும் நம்மை பார்த்து கேட்கும் அளவுக்கு ஆச்சரியமாக வைத்துக்கொண்டால் அதுவே நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.
நமக்கு பணம், நகை இருக்கும்போது வரும் பெருமையை விட இவ்வளவு வயது ஆகியும் எப்படி இருக்கிறாங்க. உடலை எப்படி மெயிண்டெய்ன் பண்றாங்க என்று நம்மை பார்த்து சிலர் கூறுவதும் நமக்கு ஒரு பெருமைதான். அதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். அதற்கு ஜிம்மிற்கு செல்வதெற்கெல்லாம் வசதி இல்லை, அல்லது நேரம் இல்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே நான் செய்யும் வேலைகள் கூட நமக்கு ஒரு வகையான உடற்பயிற்சியே. அதாவது கூட்டுவது, துடைப்பது, உட்கார்ந்து பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளை செய்வது, முடிந்தவரைக்கும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியம்.
அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம். உடலுக்கு யோகா வலிமையையும் மனதுக்கு அமைதியான சூழ்நிலையையும் உருவாக்கும். அடுத்து கணவன், மனைவி உறவுக்குள்ளும் ஒருவகையான சலிப்பு மற்றும் விரிசல் ஏற்படுகின்றது. ஏன் இந்த விரிசல் என்றால் குழந்தையை வளர்க்கிறோம் என்ற பெயரில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதையோ, விருப்பத்தை சொல்வதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. இது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்திவிடும். கடமைக்காக வாழ்வதாக இன்றும் நிறையபேர் சொல்வதுண்டு. 40 வயதாகிவிட்டது இனிமேல் என்ன? என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 40 வயதிற்கு பிறகும் சந்தோசமான வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணவேண்டும்.
உணவுமுறைகளிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதுவும் குழந்தைபேறுக்கு பிறகு நிறைய பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்று நிறைய மாற்றங்களால் உடலில் நிறைய நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.
இந்த காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. அதற்கு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடிய பச்சை காய்கறிகள், கீரைகள், பயறுவகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நமது உடம்பை இயற்கையான உணவை உட்கொண்டு நல்ல திடகாத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக உணவின் மீது அதிக அக்கறை செலுத்தி நல்ல சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க கூடாது. எடையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக நாம் அடிக்கடி கல்யாண போட்டோவை எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் கல்யானத்தின் போது அவ்வளவு ஸ்லிம்மாக இருந்திருப்பார்கள். இது தான் அவர் உடல் எடையை குறைக்க நல்ல டிப்ஸ்.
கல்யாணத்திற்கு பிறகு எல்லோருக்கும் எடை அதிகரிக்க காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்வலி, முதுகுவலி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எடைமீது மட்டும் இல்லீங்க, உடை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
40 வயதிற்கு மேல் பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளனர். அது ரொம்ப தவறு. எப்போதுமே ஒரு பெண் எவ்வளவு வயதாக இருந்தாலும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் வயதுக்கு ஏற்ற உடை, அலங்காரம், ஆபரணங்கள் அணிவது என்று தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மெனோபாஸ் பிரச்சினை பெண்களை இன்னும் பலவீனமாக்கிவிடுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடமும், கணவனிடம் புரியவைக்க வேண்டும். இதனாலேயே பல பெண்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
முறையற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக மெனோபாஸ் ஏற்படும் போது பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிழுங்கள். தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதை விடுத்து குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள். குழந்தைகளுடன் நாம் செலவு செய்ய செய்ய நாம் நம்முடைய வயதை மறந்து குழந்தைகளுடன் சேர்ந்து இன்னும் நாம் இளமையாக இருப்போம். நாம் நம்முடைய வயதை மறந்து சந்தோசமாக இருக்கமுடியும்.
- நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது.
உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் சில...
* நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.
* நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.
* இலந்தைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.
* கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்துக்காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.
* நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு ஸ்பூன் கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.
* வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.
* பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் வளரும்.
* நினைவாற்றல் அதிகரிக்க செய்வதில் பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.
- உடற்பயிற்சிக்கு முன்பு வயிறுநிறைய சாப்பிடக்கூடாது.
- டீ, காபி குடிப்பது உடலின் நீர்ச்சத்து அளவை குறைக்கச் செய்யும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் செய்த பின்னரும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொருத்து, அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதோடு உடற்பயிற்சி செய்வதற்கான தசைவலிமையை அந்த உணவுகளின் மூலம் தான் கிடைக்கும். அதனால் என்ன மாதிரியான உணவுமுறை உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம், என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது, பெட்ரோல் இல்லாமல் காரை ஓட்ட முயற்சி செய்வது போன்றது. நம்முடைய உடலுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அதிக எனர்ஜி தேவைப்படும். அதனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான சக்தி இல்லாமல் போனால் உடலில் இருக்கும் நம்முடைய இயக்கத்துக்கு தேவையான ஆற்றலை உடற்பயிற்சியே உறிஞ்ச ஆரம்பிக்கும். எனவே வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும். அது பயிற்சிக்குப் பின்பு அதிக சோர்வை உண்டாக்கும்.
காலையில் டீ அல்லது காபி குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். ஆனால் அதேசமயம் அது உங்களுடைய உடலின் ஆற்றலை குறைக்கவும் செய்யும்.
டீ, காபி குடிப்பது உடலின் நீர்ச்சத்து அளவை குறைக்கச் செய்யும். குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பின்பு டீ, காபி எடுத்துக்கொள்வது மேலும் அதிக நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். அதனால் உடற்பயிற்சியின் போதும், அதற்குப் பின்பும் உங்கள் உடலும் தசைகளும் அதிகமாக சோர்வடைந்துவிடும்.
உடற்பயிற்சிக்கு முன்பு வயிறுநிறைய சாப்பிடக்கூடாது. அதற்காக எதுவும் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. குறைவாக சாப்பிட வேண்டும். ஆனால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
காலையில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆரோக்கியமான உணவு தான் தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். அதனால் அதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இது உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் தசைப்பிடிப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.
சிலர் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வார்கள். சிலர் மாலை நேரங்களில் செய்வார். எந்த நேரமாக இருந்தாலும் உடற்பயிற்சிக்கு முன்பு மிகக் குறைவாகவும் அதேசமயம் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது தான் கலோரிகள் எரிக்கப்படுமே அதனால் நிறைய சாப்பிட்டால் தவறில்லை என்று நினைக்கக் கூடாது. உடற்பயிற்சிக்கு முன் நிறைய சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்யும்போது கொஞ்சம் கடினமாகவும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படும்.
உடற்பயிற்சியை தொடங்குவதற்கு 10 - 15 நிமிடங்களுக்கு முன்பு ஏதாவது பழங்கள் அல்லது ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுங்கள். பயிற்சிக்குச் செல்லும் முன்பாக கொஞ்சமாக டிபன் அல்லது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் உடனே பயிற்சி செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து செய்வது தான் நல்லது. ஒருவேளை நிறைய சாப்பிட்டு விட்டால் குறைந்தது அந்த உணவு ஜீரணிக்கும் வரை 90 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவும் மிக முக்கியம். அதையும் கட்டாயம் திட்டமிட வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பின் அதிக புரதங்கள் கொண்ட உணவுகளையும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்தெ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளும்போது உடற்பயிற்சி சமயத்தில் இழந்த உடல் மற்றும் தசையின் வலிமையைக் கூட்டி புத்துணர்ச்சியையும் எனர்ஜியையும் தரும்.
குறிப்பாக, உடற்பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களுக்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வலிமையான தசைகள் உண்டாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்