search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைகள்"

    • உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
    • உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம்.

    40 வயதை தாண்டிய பெண்களா நீங்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு முதலில் பெண்கள் 40 வயதை தாண்டியவுடன் உடல் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உடலை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம்.

    40 வயதிற்கு மேல் உடலை அழகாக வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்க கூடாது. உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? என்று எல்லோரும் நம்மை பார்த்து கேட்கும் அளவுக்கு ஆச்சரியமாக வைத்துக்கொண்டால் அதுவே நமக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

    நமக்கு பணம், நகை இருக்கும்போது வரும் பெருமையை விட இவ்வளவு வயது ஆகியும் எப்படி இருக்கிறாங்க. உடலை எப்படி மெயிண்டெய்ன் பண்றாங்க என்று நம்மை பார்த்து சிலர் கூறுவதும் நமக்கு ஒரு பெருமைதான். அதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். அதற்கு ஜிம்மிற்கு செல்வதெற்கெல்லாம் வசதி இல்லை, அல்லது நேரம் இல்லை என்று கூறுபவர்கள் வீட்டிலேயே நான் செய்யும் வேலைகள் கூட நமக்கு ஒரு வகையான உடற்பயிற்சியே. அதாவது கூட்டுவது, துடைப்பது, உட்கார்ந்து பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளை செய்வது, முடிந்தவரைக்கும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியம்.

    அதுமட்டுமில்லாமல் உடற்பயிற்சி என்பதையும் தாண்டி யோகா என்பது அனைவருக்கும் அவசியம். உடலுக்கு யோகா வலிமையையும் மனதுக்கு அமைதியான சூழ்நிலையையும் உருவாக்கும். அடுத்து கணவன், மனைவி உறவுக்குள்ளும் ஒருவகையான சலிப்பு மற்றும் விரிசல் ஏற்படுகின்றது. ஏன் இந்த விரிசல் என்றால் குழந்தையை வளர்க்கிறோம் என்ற பெயரில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதையோ, விருப்பத்தை சொல்வதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. இது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்திவிடும். கடமைக்காக வாழ்வதாக இன்றும் நிறையபேர் சொல்வதுண்டு. 40 வயதாகிவிட்டது இனிமேல் என்ன? என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 40 வயதிற்கு பிறகும் சந்தோசமான வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணவேண்டும்.

    உணவுமுறைகளிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதுவும் குழந்தைபேறுக்கு பிறகு நிறைய பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு போன்று நிறைய மாற்றங்களால் உடலில் நிறைய நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

    இந்த காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கிறது. அதற்கு தேவையான புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடிய பச்சை காய்கறிகள், கீரைகள், பயறுவகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நமது உடம்பை இயற்கையான உணவை உட்கொண்டு நல்ல திடகாத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக உணவின் மீது அதிக அக்கறை செலுத்தி நல்ல சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க கூடாது. எடையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக நாம் அடிக்கடி கல்யாண போட்டோவை எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் கல்யானத்தின் போது அவ்வளவு ஸ்லிம்மாக இருந்திருப்பார்கள். இது தான் அவர் உடல் எடையை குறைக்க நல்ல டிப்ஸ்.

    கல்யாணத்திற்கு பிறகு எல்லோருக்கும் எடை அதிகரிக்க காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்வலி, முதுகுவலி போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எடைமீது மட்டும் இல்லீங்க, உடை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    40 வயதிற்கு மேல் பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதை மிகவும் குறைத்துக்கொண்டுள்ளனர். அது ரொம்ப தவறு. எப்போதுமே ஒரு பெண் எவ்வளவு வயதாக இருந்தாலும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் வயதுக்கு ஏற்ற உடை, அலங்காரம், ஆபரணங்கள் அணிவது என்று தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து மெனோபாஸ் பிரச்சினை பெண்களை இன்னும் பலவீனமாக்கிவிடுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடமும், கணவனிடம் புரியவைக்க வேண்டும். இதனாலேயே பல பெண்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

    முறையற்ற மாதவிடாய் சுழற்சியின் காரணமாக மெனோபாஸ் ஏற்படும் போது பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிழுங்கள். தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதை விடுத்து குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள், விளையாடுங்கள். குழந்தைகளுடன் நாம் செலவு செய்ய செய்ய நாம் நம்முடைய வயதை மறந்து குழந்தைகளுடன் சேர்ந்து இன்னும் நாம் இளமையாக இருப்போம். நாம் நம்முடைய வயதை மறந்து சந்தோசமாக இருக்கமுடியும்.

    • ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள் மற்றும் புத்தகப் பைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
    • இதுவரை ரூ.9.93 லட்சம் மதிப்பிலான கல்வி சேவைகளை இப்பள்ளிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    மகளிர் மேம்பாட்டுப் பணிகளை முதன்மைப் பணியாக மேற்கொண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனம் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளையும் சிறப்பாக குழந்தைகள், முதியோர் தொடர்பான பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் கிராமத்தில் அரசு மற்றும் சகோதரிகளால் இணைந்து நடத்தப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு கல்விச் சேவைகளை ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கி வருகிறது.

    இருளர், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளிச் செல்லாக் குழந்தைகள் என 126 குழந்தைகள் இவ்வுறைவிடப் பள்ளியில் தங்கி சிறப்புக் கல்வி பயின்று வருகின்றனர்.

    இம்மாணவர்களின் உடல் நலன் கருதியும், கல்வி நலனுக்காகவும் அப்பள்ளியில் பயிலும் 126 குழந்தைகளுக்கு ரூ. 72450-மதிப்பில் குளிர் கால உடைகள் மற்றும் ரூ. 56650- மதிப்பில் புத்தகப்பைகள் என மொத்தம் ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள் மற்றும் புத்தகப் பைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்வில் உதவிகளை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும், குழந்தைகளின் கல்வி நலனுக்காகவும் ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.9.93 லட்சம் மதிப்பிலான கல்வி சேவைகளை இப்பள்ளிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

    ×