search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan"

    • தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • கோவில்களில் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ கோவில்களிலும் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களையும் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரபோஸ் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ் மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.

    கரந்தை கண்ணன், மாநில இணை செயலாளர் மகேந்திரன், மாஸ்டர் சுரேஷ், மாநில துணை தலைவர் கோவி ந்தராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    முடிவில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மையக்குழு உறுப்பினர் கே.ஆர்.ஜி. ராஜா செய்திருந்தார்.

    இதில் முன்னாள் காவல் அதிகாரி வைத்தியநாதன், மகளிர் அணி கோமதி, அலமேலு, சண்முகம், சக்தி, மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பின் பஞ்ச ஆர்த்தி செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளின் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவின் 6ம் நாள் அன்று கந்தசஷ்டியை முன்னிட்டு, உற்சவர் சண்முகசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வும் தொடர்ந்து, கிழக்கு சன்னதியில் சூரபத்மினி வதம் செய்கின்ற சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    7-ம் நாள் அன்று தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும், அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னி யாகம் வளர்த்து மங்கள ஞான் பூட்ட உற்சவர் சண்முகசுவாமிக்கு தேவசேனாவுடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மேற்கு கோபுர வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமாரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

    சூரனை முருகப்பெ ருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சா ரியார்களால் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பொறு ப்பாளர் சரத்சந்திரன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால எழிலரசன்,பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அற ங்காவல ர்குழுத்தலைவர் சாமிநாதன்,நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் சம்பந்த விநாயகர், சிவசித்தி விநாயகர் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 17-ம் தேதி காலை கணபதி,நவகிரக,லட்சுமி ஹோமமும்,மாலை அங்குரார்பணம், கும்பாலங்காரம்,பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது. 18-ம் தேதி காலை யாகபூஜை, கன்னியா பூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. இன்று யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    இதில் வேளாக்குறிச்சி 18 - வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 கிலோ புதிய ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதுசமயம் ஐயப்பனுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் வீதியுலா மற்றும் படிபூஜை நடைப்பெற்றது.

    தொடர்ந்து ஐயப்பன் சாமிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், சாஸ்தாஹோமம் நடைப்பெற்றது.

    இதையடுத்து ஐயப்பன் சாமி அலங்காரத்துடன் செண்டை மேளம் முழக்கத்துடன் வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அங்கிருந்து புறப்பட்டு சீனிவாச பெருமாள் கோவில் 4 ராஜ வீதிகள் வழியாக பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவில் வந்தடைந்தது. இரவு சிறப்பு படி பூஜைகளும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் ஐயப்பன் யாத்திரை குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி மங்கையர்கரசி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.

    இதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

    அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சுவாமி அறை அருகே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு அதில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
    • வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார்.

    அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

    தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர்-உமாம கேஸ்வரி அம்மன்,சட்டைநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர்,திருநிலைநாயகிஅம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் சட்டைநாதர்கோயில் வளாகத்தில் கண்டெடுக்க ப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள்,தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே தனிபாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு பூட்டி சில்வைக்கப்பட்டுள்ளது.

    இதனை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சுவாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து விவாதித்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ திருமேனிகள் சட்டைநாதர் கோயிலில்தான் வைக்க வேண்டும்.

    இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.

    தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

    பேட்டியின் போது அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், தமிழ் சங்கத் தலைவருமான மார்கோனி, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், மருந்தாளுனர் முரளிதரன் உடனிருந்தனர்.

    • கைலாசநாதருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருள் மிகு ஆதி கைலாசநாதர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் மற்றும் 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து நிறைவாக 108 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்தனர்.

    சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்ப ட்டது பின்னர் அபிஷேகம் செய்த சாதம் கலவை சாதம் ஆக தயார் செய்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஏராளமா ன பக்தர்கள் கலந்து கொ ண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடு ஆதி கைலாசநாதர் சேவா சபா அறக்கட்டளை மேலா ண்மை அறங்காவலர் சிவ விவேகானந்தன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • வதான்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் பௌ ர்ணமியன்று சிவாலயங்களி ல் அன்னாபி ஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ண மியையொட்டி மயிலாடு துறை யில் பல்வேறு சிவாலயங்களில் அன்னா பிஷேகம் நடைபெ ற்றது. சேந்தங்குடி வள்ளலார் கோயில் என்று அழை க்கப்படும் ஸ்ரீ வதான்யே ஸ்வரர் கோயிலில் சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் காய்கறிகள் கொண்டு அலங்கரி க்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக தரிசனம் செய்தனர். இதேபோல், அபயா ம்பிகை மயில் உருவக்கொ ண்டு சிவனை வழிபட்ட தலமான மயிலாடு துறை மாயூரநாதர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவா வடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மாயூரநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்ப ட்டு, அன்னத்தால் அபிஷே கம் செய்யப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்த ர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பல்வேறு கோயில்க ளில் நடைபெற்ற அன்னா பிஷேக விழாவில் ஏராளமா ன பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

    • கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் பவுர்ணமி ஐப்பசி பரணி விழா 2 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாத பவுர்ணமி விழா நேற்று கோரக்க சித்தர் ஆசிரமத்தில் கோலாகலமாக தொட ங்கியது. இதை யொட்டி விழாவின் முதல் நாளான நேற்று அன்னாபிஷேகம் நடைபெ ற்றது.

    முன்னதாக கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடத்தில் மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை யடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோபுர கலசம் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்து ள்ளது. ஆதீன தென்மேற்கு மூலையில் முற்றிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் ஒன்றரை டன் எடையுள்ள ஞான விநாயகர் புதிதாக அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனை முன்னிட்டு திருக்கடையூர் மகேஸ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளை நேற்று முன் தினம் தொ டங்கினர்.

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்கள் எடுத்து வரப்பட்டு மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசம் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது .

    தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்ற கும்பா பிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.
    • கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 14-வது திவ்யதேச கோவிலாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் கல்கருட பகவான் மிகவும் பிரசித்தமானவர். இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற கோவிலாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கடந்த 23-ந் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 24, 25, 26-ந் தேதிகளில் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இதற்காக ஆகம பட்டாச்சாரியார் கண்ணன், கோனேரிராஜபுரம் சம்பத் பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியார், வாசுதேவ பட்டாச்சாரியார், கோபி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜைகளை நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து, இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலின் செயல் அலுவலர் பிரபாகரன் மூலவர் விமானத்திலிருந்து பச்சைக்கொடி அசைக்க அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.. கோவிந்தா.. பக்தி கோஷம் விண்ணை பிளக்க தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் ராமலிங்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சுகுமார், தே.மு.தி.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.மகேஷ், வசந்த மாளிகை பாத்திர கடை நெல்லை ரமேஷ் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்

    ×