என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் முன்னாள் ஐ.ஜி. சாமி தரிசனம்
- சுவாமி அறை அருகே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு அதில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
- வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர்-உமாம கேஸ்வரி அம்மன்,சட்டைநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர்,திருநிலைநாயகிஅம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் சட்டைநாதர்கோயில் வளாகத்தில் கண்டெடுக்க ப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள்,தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே தனிபாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு பூட்டி சில்வைக்கப்பட்டுள்ளது.
இதனை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சுவாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து விவாதித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ திருமேனிகள் சட்டைநாதர் கோயிலில்தான் வைக்க வேண்டும்.
இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.
தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.
பேட்டியின் போது அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், தமிழ் சங்கத் தலைவருமான மார்கோனி, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், மருந்தாளுனர் முரளிதரன் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்