search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Croatia"

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்து வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #FIFA2018 #FifaWorldCup2018 #England #Croatia
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது.

    ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை நையபுடைத்து எடுத்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையில் சாய்த்தது.

    2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்துள்ள குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டும் வேட்கையில் வரிந்து கட்டுகிறது. அந்த அணிக்கு பிரதான பலமே நடுகளம் தான். கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், (2 கோல் அடித்துள்ளார்), இவான் ராகிடிச்சும் நடுகள பகுதியின் இரட்டை தூண்கள் ஆவர். உலகின் மிகச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படும் இவர்களிடம் இருந்து பந்தை தட்டிப்பறிப்பது எளிதல்ல. ரஷியாவுக்கு எதிரான கால்இறுதியில் மோட்ரிச்சின் கால்களை பந்து 139 முறை தொட்டு பார்த்தது. அதில் 102 முறை சக வீரர்களுக்கு பந்தை கடத்தி கொடுத்தது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

    இவர்களை தவிர்த்து மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் குரோஷிய அணி குறிப்பிட்ட வீரரை சார்ந்து இருந்ததில்லை. நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்திருப்பது அதற்கு உதாரணமாகும். தசைப்பிடிப்பால் அவதிப்படும் கோல் கீப்பர் டேனிஜெல் சுபசிச் களம் காண்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை துரத்தியது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி 52 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளது.

    இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் நம்பிக்கை வீரர்களாக மின்னுகிறார்கள். சுவீடனுக்கு எதிராக இங்கிலாந்து அணி கச்சிதமாக செயல்பட்டதால் இந்த ஆட்டத்தில் அணியில் மாற்றத்தை செய்ய பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் விரும்பவில்லை.

    அந்த அணியினர் நேற்று வித்தியாசமாக, ரப்பரால் ஆன சிக்கன் போன்ற பொம்மைகளை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் அதனை வேகமாக தூக்கி போட்டு பிடித்தும், சக வீரர்களிடம் இருந்து இந்த பொம்மை சிக்கனை பறிப்பது போன்றும் பயிற்சி மேற்கொண்டனர். இந்த மாதிரியான பயிற்சி இன்றைய ஆட்டத்தில் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    குரோஷிய வீரர் டேஜன் லோவ்ரென் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர். கடந்த சில சீசன்களில் அவர் 25 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை களத்தில் காட்டுவேன்’ என்றார்.

    இவ்விரு அணிகளும் தகுதி சுற்று, நட்புறவு போட்டிகளில் மோதியுள்ளன. ஆனால் உலக கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும். சரிசம பலத்துடன் திகழும் இவ்விரு அணிகளில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்பதை யூகிப்பது கடினமாகும். ஆட்டம் இன்னொரு முறை பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #FIFA2018 #FifaWorldCup2018 #England #Croatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழ்ங்கப்பட்டது.

    இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    முதலில் ரஷியாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில்   கோல் போட்டது.

    இர்ண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
    இதனால் மீண்டும் 1 - 1 என சமனானது.

    மூன்றாவது வாய்ப்பை ரஷியா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

    நான்காவது வாய்ப்பை ரஷியா கோலாக்கியது. குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

    இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என  வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகிக்கிறது. #WorldCup2018 #RUSCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமாண்டிக் ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia
    குரோஷியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 1-1 சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #CRODEN #CroatiavDenmark
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது.

    இதையடுத்து முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #CRODEN #CroatiavDenmark #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது #ISLCRO #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது.
     இதையடுத்து நான்காவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள 
    ஐஸ்லாந்து, குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    குரோசியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஐஸ்லாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. 

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மிலான் படேல்ஜ் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் 76-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கைல்பி சிகுர்ட்சன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்தில் குரோசியா அணியின் இவான் பெரிசிக் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி மீண்டும் முன்னிலை பெற்றது. 



    அதன்பின் எந்த அணியிம் கோலும் அடிக்காததால் குரோசியா அணி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் ஐஸ்லாந்து அணி தொடரைவிட்டு வெளியேறியது. #ISLCRO #WorldCup2018 #FIFA2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா, நைஜீரியா அணிகள் மோதின. 

    இப்போட்டியின், முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடம் குரோசியா வீரர் ஒருவர் கோல் அடிக்க முயற்சித்தார். அந்த பந்து நைஜீரியா வீரர் எடிபோவின் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடம் குரோசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோசியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில், குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோஸ்டா ரிக்கா - செர்பியா, ஜெர்மனி - மெக்சிகோ, பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA
    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின், குரோஷிய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #WorldCupSquads2018
    ஜாக்ரெப்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 24 பேர் கொண்ட குரோஷிய அணியை பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் நேற்று அறிவித்தார். லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச், மரியோ மான்ட்ஜூகிச், இவான் பெரிசிச் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதே போல் ஸ்பெயின் அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இனியஸ்டா, டேவிட் சில்வா, செர்ஜியோ ரமோஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் தகுதி சுற்றில் விளையாடிய ஆல்வரோ மோரட்டா மற்றும் மார்கஸ் அலோன்சோ நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, போர்ச்சுகல், மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே உலககோப்பை போட்டிக்கான பெல்ஜியம் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அந்த அணியின் நடுகள வீரர் 30 வயதான ராட்ஜா நையிங்கோலன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  #WorldCupSquads2018
    ×