search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cristiano Ronaldo"

    ரொனால்டோ பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கியதால், யுவாடன்ஸின் பங்கு 5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நைக் கவலையடைந்துள்ளது. #Ronaldo #Juventus
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த வீரரான இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். சுமார் 9 ஆண்டு காலம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார்.

    இவரது தலைமையில் ரியல் மாட்ரிட் வெற்றிமேல் வெற்றிகளை குவித்தது. இந்நிலையில் இந்த சீசனில் இருந்து இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ்க்கு மாறினார். ரொனால்டோ யுவான்டஸ் வந்ததும் யுவான்டஸ் அணியின் மதிப்பு அதிகரித்தது.



    இந்நிலையில்தான் ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த மயோர்கா கேத்ரின் ரொனால்டோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக பணம் ஒப்பந்தம் முறையில் கொடுக்கப்பட்டது என்றார்.

    இதனால் ரொனால்டோ வழக்கை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார். ரொனால்டோ யுவான்டஸ் அணியில் சேரும்போது அந்த அணியின் பங்கு அதிக அளவில் உயர்ந்தது. தற்போது ரொனால்டோ பிரச்சனையில் சிக்கியதால் யுவான்டஸ் அணியின் பங்கு 5 சதவீதம் சரிந்தது. அதேபோல் பலகோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ள நைக் நிறுவனமும் கவலையடைந்துள்ளது.
    தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார், அது பொய்யான செய்தி என ரொனால்டோ கற்பழிப்பு புகாருக்கு பதில் அளித்துள்ளார். #Ronaldo
    அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா என்ற 34 வயது பெண்மணி, கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு போட்டியளிக்கும்போது புகார் கூறினார். பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக அப்போது தெரிவித்திருந்தார்.

    அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் கேத்ரின் மயோர்கா வெளியிட்டிருந்தார்.



    அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாருக்கு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனவும் ரொனால்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி. உண்மைக்கு புறம்பானது. எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அதுபோன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும் என்றார்.
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை கற்பழித்தார் என்று அமெரிக்க பெண் தற்போது கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Ronaldo
    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் கிளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார்.

    33 வயதான ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 451 கோல்கள் அடித்து கிளப் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    ரொனால்டோ சமீபத்தில் அதில் இருந்து விலகி இத்தாலியில் உள்ள யுவான்டஸ் கிளப்பில் இணைந்தார். 4 வருடத்துக்கு ரூ.849 கோடிக்கு ஒப்பந்தமானார்.

    இந்த நிலையில் ரொனால்டோ மீது அமெரிக்க மாடல் அழகி கேத்ரின் மயோர்கா ரொனால்டோ என்னை கற்பழித்தார் என்று ஜெர்மனி பத்திரிகைக்கு பேட்டியளித்ததால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    ரொனால்டோவுடன் கேத்ரின் (பழைய படம்)

    2009-ம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் உள்ள விடுதியில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே வாயை திறக்காமல் இருக்க ரூ. 2.7 கோடி அளித்தார் என்றும் அந்த பெண் ஜெர்மனி பத்திரிகை ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரொனால்டோவின் வக்கீல் பெர்க்மான் இதை மறுத்துள்ளார். ரொனால்டோ மீது கூறப்பட்ட கற்பழிப்பு புகார் தொடர்பாக 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லாஸ் வேகாஸ் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric
    லண்டன் :

    2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

    அதன்படி, 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற உலக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு கேப்டன் மோட்ரிச்சின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #FIFA #LukaModric
    ‘செரி ஏ’ லீக்கின் 4-வது ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை யுவான்டஸ் அணிக்காக பதிவு செய்தார். #Ronaldo
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த இவர், தற்போது இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    ரொனால்டோ ‘செரி ஏ’ சீசனில் யுவான்டஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் மூன்று போட்டிகளிலும் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

    யுவான்டஸ் அணிக்காக கோல் கணக்கை தொடங்காத ரொனால்டோ, நேற்று 4-வது ஆட்டத்தில் சஸ்சுவோலா அணிக்கெதிராக களம் இறங்கினார்.

    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன்பின் 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இதன்மூலம் யுவான்டஸ் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். அத்துடன் அல்லாமல் 65-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார்.



    சஸ்சுவோலா அணியைச் சேர்ந்த கவுமா பாபகார் இன்ஜூரி நேரமான 91-வது நிமிடத்தில் கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. தொடக்க கோல் அடித்ததுடன் அணியை வெற்றி பெறவும் வைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

    இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது. நபோலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    ஐரோப்பிய சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மோட்ரிச்சிற்கு ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ronaldo #LukaModric
    கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    பெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.

    கடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.



    விருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.
    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர்கள் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று ஆலிவர் ஜெரார்ட் வலியுறுத்தியுள்ளார். #FIFA
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் மற்றும் குரோசியா வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதின. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

    பிபா சமீபத்தில் சிறந்த வீரர் விருதிற்கான கடைசி மூன்று பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் மெஸ்சி, பிரான்ஸ் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சாலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் உள்ள கிலியான் மப்பே, கிரிஸ்மான் ஆகியோர் பெயர் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரார்டு பிபா விருதிற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பலோன் டி'ஆர் விருதுதான் முக்கியமானது. இதை பிரான்ஸ் வீரர்களில் ஒருவர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஆலிவர் ஜெரார்டு கூறுகையில் ‘‘பிபா விருதுக்கான பட்டியலில் பிரான்ஸ் வீரர் இடம் பெறாதது ஆச்சர்யம் அளித்தது. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிபா விருதிற்கு அதிக அளவில் முக்கியத்தும் கொடுப்பது கிடையாது.

    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும். நான் வாக்கு அளித்தால், நான் எனது பார்ட்னரைத்தான் தேர்வு செய்வான். ஆனால், அதை உங்களுக்குச் சொல்ல மாட்டேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

    அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

    தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.



    ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

    ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். #Messi #Barcelona
    கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவும். இருவரும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.



    இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.



    யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #FIFA #Ronaldo
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக பல்வேறு கட்டங்களாக வீரர்கள் பட்டியலை வடிகட்டி தற்போது மூன்று பேரை இறுதியாக பிபா தேர்வு செய்துள்ளது.

    இந்த மூன்று பேர் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், லிவர்பூல் அணிக்காக விளையாடிய முகமது சலா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார்.

    கடந்த 11 ஆண்டுகளில் முதன் முறையாக மெஸ்சி கடைசி மூன்று பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் பார்சிலோனா அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். லா லிகா, கோபா டெல் ரே ஆகிய கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மெஸ்சி 2007 மற்றும் 2008-ல் 2-வது இடம் பிடித்தார். அதன்பின் ஐந்து முறை சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    முகமது சலா லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் ரியல் மாட்ரிட் அணிக்கு ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் டிராபியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மோட்ரிச் தலைமையிலான குரோசியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் இடம் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தது.
    2017-18-ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் வழங்கப்படும் விருதிற்கான பட்டியலில் மெஸ்சி பெயர் இல்லை. #Messi #Ronaldo
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.



    கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.



    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.
    யுவான்டஸ் அணிக்கான தனது அறிமுக போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். #CR7, SerieA #juventus
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறினார். யுவான்டஸ் அணிக்காக ரொனால்டோ விளையாடிய முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் யுவான்டஸ் சியேவோவேரோனா அணியை எதிர்கொண்டதது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணியின் சமி கேடிரா முதல் கோலை பதிவு செய்தார். 38-வது நிமிடத்தில் சியேவோவேரோனா அணியின் மரியஸ் ஸ்டெபின்ஸ்கி பதில் கோல் அடித்தார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் 56-வது நிமிடத்தில் சியேவோவேரோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணி இமானுலே ஜியாச்செரினி கோல் அடித்தார்.

    இதனால் யுவான்டஸ் 1-2 என பின்தங்கியிருந்தது. 64-வது நிமிடத்தில் ரொனால்டா வெளியேறினார். அதுவரை போராடி அறிமுக போட்டியில் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    ரொனால்டோ வெளியேறியதும் 75-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் யுவான்டஸிற்கு ஒரு கோல் கிடைத்தது. அதன்பின் இன்ஜூரி நேரமான 93-வது நிமிடத்தில் பெர்னார்டெஸ்சி கோல் அடிக்க யுவான்டஸ் 3-2 என வெற்றி பெற்றது.
    ×