search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA Men Player Award"

    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric
    லண்டன் :

    2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.

    அதன்படி, 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள முகமது சலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற உலக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக குரோசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு கேப்டன் மோட்ரிச்சின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீராங்கனைக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #FIFA #LukaModric
    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர்கள் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று ஆலிவர் ஜெரார்ட் வலியுறுத்தியுள்ளார். #FIFA
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் மற்றும் குரோசியா வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதின. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

    பிபா சமீபத்தில் சிறந்த வீரர் விருதிற்கான கடைசி மூன்று பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் மெஸ்சி, பிரான்ஸ் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, முகமது சாலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் உள்ள கிலியான் மப்பே, கிரிஸ்மான் ஆகியோர் பெயர் இடம் பெறாதது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரார்டு பிபா விருதிற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பலோன் டி'ஆர் விருதுதான் முக்கியமானது. இதை பிரான்ஸ் வீரர்களில் ஒருவர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஆலிவர் ஜெரார்டு கூறுகையில் ‘‘பிபா விருதுக்கான பட்டியலில் பிரான்ஸ் வீரர் இடம் பெறாதது ஆச்சர்யம் அளித்தது. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிபா விருதிற்கு அதிக அளவில் முக்கியத்தும் கொடுப்பது கிடையாது.

    பலோன் டி'ஆர் விருதை பிரான்ஸ் வீரர் அல்லது மோட்ரிச் வெல்ல வேண்டும். நான் வாக்கு அளித்தால், நான் எனது பார்ட்னரைத்தான் தேர்வு செய்வான். ஆனால், அதை உங்களுக்குச் சொல்ல மாட்டேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை உள்பட மூன்று டிராபிகளை கைப்பற்றிய பின்னரும் பதக்க பிபா விருது பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என கிரிஸ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் கிரிஸ்மான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிபாவின் சிறந்த வீரருக்கான கடைசி 3 பேர் பட்டியலில் இடமபிடித்திருந்தார். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி 2-வது இடம் பிடித்தார். கிரிஸ்மானுக்கு 3-வது இடமே கிடைத்தது.

    அப்போது கிரிஸ்மான் விளையாடிய அணி எந்தவித கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. யூரோ 2016 தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி தோல்வியை சந்தித்தது.

    தற்போது கிரிஸ்மான் இடம் பிடித்துள்ள அணி மூன்று கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் யூரோப்பா லீக், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.



    ஆனால் இந்த வருடத்திற்கான பிபா விருதிற்கான கடைசி மூன்று பேர் பட்டியலில் ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதனால் கிரிஸ்மான் கவலையடைந்துள்ளார்.

    ஒரு கோப்பையையும் வாங்காத போது இறுதிப் பட்டியலில் பெயர் இருந்தது. தற்போது மூன்று கோப்பைகளையும் வென்ற பிறகு தனது இடம் இல்லையே என்று தனது அதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #FIFA #Ronaldo
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக பல்வேறு கட்டங்களாக வீரர்கள் பட்டியலை வடிகட்டி தற்போது மூன்று பேரை இறுதியாக பிபா தேர்வு செய்துள்ளது.

    இந்த மூன்று பேர் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், லிவர்பூல் அணிக்காக விளையாடிய முகமது சலா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக அறிவிக்கப்படுவார்.

    கடந்த 11 ஆண்டுகளில் முதன் முறையாக மெஸ்சி கடைசி மூன்று பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் பார்சிலோனா அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். லா லிகா, கோபா டெல் ரே ஆகிய கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். என்றாலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மெஸ்சி 2007 மற்றும் 2008-ல் 2-வது இடம் பிடித்தார். அதன்பின் ஐந்து முறை சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    முகமது சலா லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் ரியல் மாட்ரிட் அணிக்கு ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் டிராபியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மோட்ரிச் தலைமையிலான குரோசியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் இடம் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தது.
    ×