search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commonwealth Games"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர்.
    • முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர். முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 

    • காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
    • கிரிக்கெட்டும், இந்தியாவும் பிரிக்க முடியாதது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    காமன்வெல்த் விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. தங்கப் பதக்கத்துக்கான இப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. பெத்மூனி 61 ரன்னும், கேப்டன் லானிங் 36 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் ரேணுகாசிங், சினே ரானா தலா 2 விக்கெட்டும், தீப்தி சர்மா, ராதாயாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. தொடக்க வீராங்கனைகள் மந்தனா 6 ரன்னிலும், ஷபாலி வர்மா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    பின்னர் ரோட்ரிக்ஸ்-கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் ஜோடி தாக்குபிடித்து விளையாடியது. ஸ்கோர் 118 ரன்னாக (14.3 ஓவர்) இருந்தபோது அந்த ஜோடி பிரிந்தது. ரோட்ரிக்ஸ் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர்.

    சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத்சிங் அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 121 ரன்னாக (15.5 ஓவர்) இருந்தது. வெற்றிக்கு 25 பந்தில் 41 ரன் தேவையாக இருந்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டாலும் மேனகா சிங் ரன்-அவுட் ஆனார். 3-வது பந்தில் யாஸ்திகா பாட்டியா (2 ரன்) எல்.பி.டபிள்யு. ஆனார். இந்தியா 19.3 ஓவரில் 152 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா 9 ரன் வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது. தோல்வி அடைந்த இந்திய பெண்கள் அணி வெள்ளிபதக்கத்தை கைப்பற்றியது.

    காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்று அசத்தியுள்ளது.

    வெள்ளி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, "கிரிக்கெட்டும், இந்தியாவும் பிரிக்க முடியாதது. நமது பெண்கள் கிரிக்கெட் அணி காமன் வெல்த்தில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.

    கிரிக்கெட்டில், முதல் காமன்வெல்த் பதக்கம் என்பதால் இது எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அணியின் அனைவருக்கும் பிரகாசமான எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்" என்றார்.

    இதேபோல் நேற்று பதக்கம் வென்றவர்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    • பேட்மின்டன், ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கிறது.
    • பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    இந்தப் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியா சார்பில் 106 வீரர்கள் , 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிகிறது.

    கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    பேட்மின்டன், ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கிறது.

    பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    இன்றைய பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.
    • நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கம் பெற்று இருந்தது.

    நேற்றைய 10-வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற நிதுன் கங்காஸ் முதல் தங்கத்தை வென்றார். ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ பிரிவில் அமித் பங்கால் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் எல்டோஸ் பவுல் தங்கம் வென்று முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து குத்துச்சண்டை மூலம் இந்தியாவுக்கு 4-வது தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார்.

    இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.

    கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல்- ஸ்ரீஜா அகுலா ( தெலுங்கானா ) ஜோடி மலேசியாவைச் சேர்ந்த சூங்-லியன் ஜோடியை எதிர் கொண்டது. இதில் சரத்கமல் ஜோடி 3-1 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் மற்றொரு தமிழக வீரர் சத்யனுடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். மேலும் சரத்கமல் ஒற்றை பிரிவில் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றார். சத்யன் அரைஇறுதியில் தோற்றதால் வெண்கல பதக்கத்துக்கு மோதுகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டிலும், குத்துச்சண்டையிலும் எதிர்பார்த்த தங்கம் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    ஆண்களுக்கான 92 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு குத்துச்சண்டையில் சாகர் அக்லாவாத் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோற்றார்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி பதக்கம் பெற்றார்.

    இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் சந்தீப் குமாரும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணியும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் -சவுரவ் கோஷல் ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது. இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெண்கலம் வென்றார். அவர் 21-15, 21-18 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஹெங்கை தோற்கடித்தார்.

    இதே போல பெண்களுக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜோலி ஜோடியும் வெண்கல பதக்கம் பெற்றது. ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55 பதக்கம் பெற்று தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது. 

    • பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக்‌ஷெட்டி ஜோடி இன்று இறுதிப் போட்டியில் களம் காணுகிறது.
    • டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி மாலை 4.25 மணிக்கு நடக்கிறது.

    காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஹாக்கியில் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இதில் இந்தியா தங்கம் வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

    அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தில் தான் மோதிய 4 போட்டியிலும் வெற்றி பெற்றது.

    முன்னதாக மதியம் 1.20 மணிக்கு பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து-மைக்கேல் லீ (கனடா) மோதுகிறார்கள்.

    மதியம் 2.10 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென் (இந்தியா)-ஜி யாங் என்ஜி (மலேசியா) மோதுகிறார்கள்.

    பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக்‌ஷெட்டி ஜோடி இன்று இறுதிப் போட்டியில் களம் காணுகிறது. இப்போட்டி மதியம் 3 மணிக்கு நடக்கிறது.

    மதியம் 3.35 மணிக்கு டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சத்யன்-பால் டிரிக்ஹால் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி மாலை 4.25 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய வீரர் சரத் கமல்-இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்ட் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
    • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

    முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • இறுதி ஆட்டத்தி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி.
    • இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதன்முறையாக இடம் பெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். தீப்தி சர்மா 13 ரன்னும், சபாலிவர்மா 11 ரன்னும் அடித்தனர். 19.3 ஓவர் முடிவில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

    இதையடுதது 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர்.

    20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது. இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    • இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • நியூசிலாந்து மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குத்துச்சண்டை போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ளனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்கால்-லியம் பிட்ச்போர்டு ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-8, 8-11, 3-11, 11-7, 4-11 என தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றனர்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதேசமயம், நியூசிலாந்து இன்று மேலும் ஒரு தங்கம் வென்று 18 தங்கப் பதக்கங்களுடன், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    • வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பூஜா கெலாட் தெரிவித்தார்.
    • பூஜாவின் வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கல பதக்கம் வென்றார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூஜா கெலாட், வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், தங்கம் வென்று தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என விரும்பியதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தார். மேலும் தனது தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    பூஜா கெலாட்டின் உருக்கமான பேச்சை அறிந்த பிரதமர் மோடி, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். வெற்றி கொண்டாடப்படவேண்டியது என்றும், வருத்தப்பட வேண்டிய தருணம் இல்லை என்றும் கூறி உள்ளார் பிரதமர்.

    பூஜாவின் வெண்கல பதக்கம் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், அவரது வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் சரின் தங்கம் வென்றார்.
    • இன்று ஒரே நாளில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

    மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் இவர் வடக்கு அயர்லாந்தின் மெக்னாலை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    • அன்னு ராணி 4வது வாய்ப்பில் 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.
    • ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர், 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று குத்துச்சண்டை பிரிவில் 2 தங்கம், மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி என இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்றனர்.

    இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலப் பதக்கம் வென்றார். 4வது வாய்ப்பில் அவர் தனது அதிகபட்ச தூரமான 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்னு ராணி பெற்றுள்ளார்.

    உலக சாம்பியன் கெல்சி-லீ பார்பர் (ஆஸ்திரேலியா), 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அதே நாட்டின் மற்றொரு வீராங்கனை மெக்கென்சி லிட்டில் (64.27 மீ) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதேபோல் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என 47 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

    ×