என் மலர்
நீங்கள் தேடியது "TableTennis"
- ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.
- அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்,வேந்தர் டாக்டர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அமெட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியை அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்,வேந்தர் டாக்டர் நாசே. ஜெ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 90 பல்கலைக்கழகங்களில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்சுசீலா ராமச்சந் திரன், இணை வேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன், துணை வேந்தர் வி. ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர் மற்றும் போட்டியின் செயலாளர் ராம்குமார் கலந்து கொண்டனர்.
- இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
- ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.






