search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cobra"

    • காட்டுமன்னார்கோவிலில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்தது.
    • பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வாத்தியார் தெருவில் குடியிருப்பு பகுதியில் 3 அடி நீளம் நாகப்பாம்பு புகுந்ததுஇதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கொளஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்கு சென்று பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோப்ரா'.
    • 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கோப்ரா - உதயநிதி ஸ்டாலின்

    கோப்ரா - உதயநிதி ஸ்டாலின்

    சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு வீடியோ பதிவின் மூலம் படக்குழு தெரிவித்துள்ளது. 


    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோப்ரா'.
    • 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    கோப்ரா

    கோப்ரா

    சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோப்ரா

    கோப்ரா


    இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோப்ரா'.
    • சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பு பிறக்க போவதாக பூசாரி கூறிய வார்த்தையால் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா (வயது 45). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்தார்.

    இந்த நிலையில் மாலதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்ததாக உணர்ந்தார். ஒரு சில வாரங்களுக்கு பின்னர் மருத்துவ மனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கோகிலா கர்ப்பம் அடைய வில்லை என்று தெரிந்தது. ஆனால் அதனை கோகிலா ஏற்கவில்லை.

    தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார். அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

    ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளும் வந்தது. அன்று மாலையே ஒரு கோவிலில் பூசாரி உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்துள்ளார். நாகப்பாம்பு பிறக்க போவதாக வந்த தகவலால் கோகிலாவின் வீட்டு முன்பு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.

    தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் கோமதி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். பூசாரி சரியாக நள்ளிரவு 12.20 மணிக்கு நாகப்பாம்பு பிறக்க போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த நிமிடத்தை எதிர்நோக்கி அனைவரும் திக், திக் என்று காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. ஆனால் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கலைய தொடங்கினர்.

    இதற்கிடையே போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து கோகிலாவை ஏற்றிக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை என தெரிவித்துள்ளனர். என்றாலும் அந்த பெண்ணின் உடலை முழுமையாக பரி சோதித்து சிகிச்சை மேற் கொள்ள டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை மருத்துவமனைக்கு கோகிலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசா மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகம் ஒன்று, அங்கு இருந்த 4 நாய்க்குட்டிகளை அவற்றின் தாயின் கண் முன்னே கொத்தி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Odisha #CobraKillspuppies
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற அந்த நல்ல பாம்பு நாய் ஒன்றின் இருப்பிடத்துக்குள் நுழைந்தது.

    ஏற்கனவே வனத்துறையினருக்கு தகவல் அளித்து இருந்த மக்கள், வனத்துறையினர் வருகைக்காக காத்து இருந்தனர். இதையடுத்து, தனது 5 குட்டிகளுடன் அங்கு இருந்த தாய் நாய் பாம்பை கண்டு குரைக்க துவங்கியது.



    நாய்களின் இருப்பிடத்தில் நுழைந்த அந்த பாம்போ, நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக கொத்தியது. இந்த சமயத்தில் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேரவே, பாம்பு அப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

    இருப்பினும் பாம்பு கொத்தியதில் 4 நாய்க்குட்டிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர்தப்பிய நிலையில், தனது இறந்த குட்டிகளை தாய் நாய் துன்பத்துடன் பார்த்தது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. #Odisha #CobraKillspuppies
    ×