search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chiyaan Vikram"

    கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. #Vikram #KamalHaasan #AksharaHaasan
    விக்ரம் நடிப்பில் `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். 

    விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையில் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், ராஜேஷ் எம்.செல்வா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #Vikram #KamalHaasan #AksharaHaasan

    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Vikram
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விக்ரம் தன் பங்குக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.



    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Vikram
    தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார். #DeviSriPrasad
    ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத், விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமிஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.

    இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது, ‘டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘சாமிஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

    ‘சாமிஸ்கொயர்’முதலில் வெளியான ‘அதிரூபனே...’ என்ற மெலோடி பாடலுக்கும், அதைத் தொடர்ந்து வெளியான ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.

    அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’  என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.



    அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.’ என்றார்.

    ரசிகர்களும், திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள். இதனிடையே ஆகஸ்ட் =2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

    ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். #ChiyaanVikram #KeerthySuresh
    சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். 

    இவ்விழாவில் படக்குழுவினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இடம் பெறும் ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.



    ஏற்கெனவே வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் வெளியிட்ட சிங்கள் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 
    விவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்‌‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vikram #AksharaHaasan #AbiMehedhi
    கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.



    அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Vikram #AksharaHaasan #AbiMehedhi

    ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. #SaamySquare #Saamy
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பாகஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டு வருகிறார்கள். இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கும் டூயட் பாடலாக உருவாக்கி வருகிறார்கள்.

    இந்தப் பாடல் படத்தின் முதல் பாடல் என்றும், விக்ரமுக்கு அறிமுகப் பாடல் இல்லை என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். மேலும், முதல் முறையாக டூயட் பாடலை படத்தில் முதல் பாடலாக உருவாக்கி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். சாமி படத்தின் முதல் பாகம் எடுத்த பிறகு, இதன் தொடர்ச்சி உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. அதற்கான கதையை சிங்கம் பாகத்தின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தி விட்டேன். சிங்கம் படத்திற்காக யோசித்ததை சாமி ஸ்கொயர் படத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்றும் ஹரி கூறியிருக்கிறார்.

    சாமி முதல் பாகத்தில் அறிமுகப்பாடலான ‘திருநெல்வேலி அல்வாடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுபோல், இந்தப் படத்திலும் விக்ரமுக்கு அறிமுகப்பாடல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், அந்த அறிமுகப்பாடல் இல்லை என்று ஹரி கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடைந்திருக்கிறது.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபிசிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இறுதி பாடல் பழனியில் படமாக்கப்படவுள்ளது. #SaamySquare #Vikram
    நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார்.

    தற்போது இதன் 2-ம் பாகம் ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கியது. தொடர்ந்து பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளார்கள்.

    தற்போது இறுதி கட்டமாக பழனியில் ஒரு பாடல் காட்சியை படமாக்க திட்ட மிட்டுள்ளனர். பெப்பி சாங்காக உருவாக இருக்கும் இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த பாடல் காட்சியோடு முழு படப்பிடிப்பும் முடியவுள்ளது. 



    சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் மீது அதிகம் எதிர்ப்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #SaamySquare #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகும் `துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது #DhruvaNatchathiram #Vikram
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்'. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். 

    இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 

    இந்த நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.



    கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து `ஒரு மனம்' என்ற சிங்கிள் டிராக் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னமும் 18 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. #DhruvaNatchathiram #Vikram

    கமல்ஹாசன் தயாரிப்பில் `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படம் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #Vikram #Ghibran
    விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 

    இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணியை துவங்கிவிட்டதாக ஜிப்ரான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `மஹாவீர் கர்ணா' என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vikram #Ghibran

    அரபு நாட்டு விமானி ஒருவர், விக்ரம் நடிப்பில் உருவான சாமி படத்தின் வசனத்தை டப்மாஸ் செய்தது, அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. #ChiyaanVikram #Vikram
    விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அரபு நாட்டு விமானி ஒருவர், டப்மாஸ் செய்துள்ளார். இது விக்ரமை மிகவும் கவர்ந்திருக்கிறது. விமானி பேசும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அரபு சாமி என்று பதிவு செய்திருக்கிறார்.



    தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்லார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
    கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. #Vikram #ChiyaanVikram
    புதிய படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது படம் தயாரிப்பில் இருக்கும்போதும், தொழில்நுட்ப பணிகள் நடக்கும்போதும் சமூக வலைத்தளத்தில் கசிந்து விடுகின்றன.

    மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் முக்கிய காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரெய்லரை உருவாக்கி விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்னதாகவே அந்த டிரெய்லரை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி வேறு வழியின்றி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தார்கள்.



    துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்குகிறார். துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளது. 
    விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலருக்கு கருத்து தெரிவித்த கஸ்தூரியிடம் விக்ரம் ரசிகர்கள் டுவிட்டரில் சண்டைப் போட்டுள்ளார்கள். #Vikram #Kasturi
    விக்ரம்-திரிஷா நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் குவித்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.

    இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரெய்லரை நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கேலி செய்தார். “முந்தா நாள் வந்த டீஸரில் கலாய்த்திருந்த அத்தனை சீன்களையும் ஒன்று சேர்த்து ஒரு டிரெய்லர் ஸ்ஸப்பா..” என்று அவர் பதிவிட்டார்.

    கஸ்தூரி முந்தா நாள் வந்த டீஸர் என்று குறிப்பிட்டது. சிவா நடித்துள்ள தமிழ் படம்-2 டிரெய்லரைத்தான். அதில் நிறைய படங்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. கஸ்தூரி அதில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். சாமி-2 படத்தின் டிரெய்லரை கஸ்தூரி விமர்சித்தது விக்ரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த “உன் பேரன் பேத்திகள் டி.வி. பார்க்கும் இந்த வயதில் நீ குத்தாட்டம் ஆடுறியே என்று பதிலடி கொடுத்தனர்.

    இதனால் ஆத்திரமான கஸ்தூரி, “சொந்த பெண்ணை விட, சின்ன வயசு பொண்ணோடு டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவுக்கு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல. பூதம் இல்லை. போடா மூடிட்டு” என்று ஆவேசமாக டுவிட்டரில் பாய்ந்தார். இந்த மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×