search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akshara Haasan"

    • முன்னணி நடிகரான கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.
    • அக்‌ஷரா ஹாசன் பாலிவுட்டின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் .

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். பாலிவுட்டின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அக்‌ஷரா ஹாசன், அஜித்தின் 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார்.


    அக்‌ஷரா ஹாசன்

    இதைத்தொடர்ந்து, இவர் நடித்த 'கடாரம் கொண்டான்', 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார். அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன், அக்‌ஷராவுக்கு ஆப்பிள் ஹெட்ஃபோன் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த வீடியோவை அக்‌ஷரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் இசை பற்றிய அறிவிப்பை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #KadaramKondan #ChiyaanVikram
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

    இந்த நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக உருவாகி வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளியாகும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற மே இறுதி அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KadaramKondan #ChiyaanVikram 

    கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #KadaramKondan #HappyPongal2019
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவை செய்துள்ளார்கள். படத்தை வருகிற ஏப்ரல் 2019-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KadaramKondan #HappyPongal2019
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், விக்ரம் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அவரது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


    கடாரம் கொண்டான் படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் மகாவீர் கர்ணா படத்திலும் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றை புத்தாண்டில் வெளியிடுகின்றனர். #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஜனவரிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கடாரம் கொண்டான் படத்தின் இரண்டாவது போஸ்டர் புத்தாண்டுக்கு வெளியாக இருப்பதாகவும், அத்துடன் மற்றொரு சிறப்பு அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


    விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

    ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KadaramKondan #ChiyaanVikram

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KadaramKondan #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பை ஜனவரிக்குள் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.

    மலேசியாவில் முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர், சென்னை திரும்பி படக்குழு பூந்தமல்லி சாலையில் பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.



    ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. `கடாரம் கொண்டான்' படப்பிடிப்பை முடித்த பின்னர் விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

    அந்த படத்தை தொடர்ந்து, பிரம்மாண்டமாக உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram

    அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்களை வெளியிட்டது அவரது முன்னாள் காதலரும், நடிகை ரதியின் மகனுமான தனுஜ் விர்வானியா என்பது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AksharaHaasan #TanujVirwani
    கமல்ஹாசனின் இளைய மகளும் நடிகையுமான அக்‌‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த படங்கள் யாரால் வெளியிடப்பட்டன என்று கேள்விகள் எழுந்தன.

    இந்த விவகாரம் குறித்து அக்‌‌ஷரா ஹாசன் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் ‘அந்த படங்கள் ஒரு படத்திற்கான போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது. யார் கசியவிட்டது என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    அக்‌‌ஷராவின் நண்பரும், நடிகருமான தனுஜ் வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    1980-களில் கமலுடன் உல்லாசப் பறவைகள், ரஜினியுடன் முரட்டு காளை போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரதி. இவரது மகனும், நடிகருமான தனுஜ் விர்வானியை, அக்‌‌ஷரா காதலித்து வந்தார். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். தற்போது வெளியான புகைப்படங்கள், அக்‌‌ஷரா 5 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய ஐ போனில் எடுக்கப்பட்டவை.



    அக்‌‌ஷரா தன்னுடைய படங்களை 2013-ம் ஆண்டு தனுஜிடம் பகிர்ந்துள்ளார். இதனால் சமீபத்தில் வெளியான அக்‌‌ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் தனுஜால் கசியவிடப்பட்டதா என்கிற கோணத்தில் மும்பை காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் இதுகுறித்து தனுஜை விசாரணை செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் அக்‌‌ஷராவின் புகைப்படங்களை தான் கசியவிடவில்லை என தனுஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவருடைய செய்தித்தொடர்பாளர் அளித்துள்ள பேட்டி:-

    “இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அக்‌‌ஷரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பல வருடங்கள் அக்‌‌ஷராவும், தனுஜும் டேட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் ஒன்றாக இல்லை. எனினும் அவர்கள் நண்பர்களாக நீடிக்கிறார்கள். அவர்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்புகூட கிண்டலாகப் பேசிக்கொண்டார்கள்.



    அவர்களுடைய உரையாடல்களை தனுஜ் வைத்துள்ளார். தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம். நட்பு ரீதியில் அவர்கள் செய்துகொண்ட கிண்டல், அவர்களுடைய பிரிவினால் நட்பு மோசமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இன்னமும் நண்பர்களாகத்தான் உள்ளார்கள்.

    ஒருவேளை தனுஜை, அக்‌‌ஷரா குற்றம்சாட்ட வேண்டுமென்றால் அவர் பல மாதங்களாக தனுஜிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. அக்‌‌ஷரா எதிர்கொண்ட இந்தப் பிரச்சினையை தனுஜ் நன்கு அறிவார். காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தனுஜ் தயாராக உள்ளார். குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்”

    இவ்வாறு அவர் கூறினார். #AksharaHaasan #TanujVirwani

    அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியான விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #AksharaHaasan
    நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

    இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார். 



    இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், காவல் துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் பிரிவினரும் தீவிரமாக இந்த வழக்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் புகைப்படத்தை முதலில் வெளியிட்ட கணினியின் ஐபி முகவரியைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AksharaHaasan

    அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கானதால் மும்பை போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். #AksharaHaasan
    அக்‌ஷராஹாசனின் தனிப்பட்ட  படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் உலா வந்தது. இதுகுறித்து இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன், அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

    மேலும், இதுதொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருப்பதாகவும், இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

    நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. #Vikram #KamalHaasan #AksharaHaasan
    விக்ரம் நடிப்பில் `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். 

    விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையில் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், ராஜேஷ் எம்.செல்வா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #Vikram #KamalHaasan #AksharaHaasan

    விவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்‌‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vikram #AksharaHaasan #AbiMehedhi
    கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.



    அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Vikram #AksharaHaasan #AbiMehedhi

    நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள்களான ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கு அறிவுரை கூறுவதில்லை என்று கூறியிருக்கிறார். #Kamal #Kamalhaasan
    கமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌‌ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்டது. கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன? மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா? என்று கேட்டதற்கு ‘நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே சின்ன பயம் அவர்களுக்குள் இருந்தது. நான் தைரியம் கூறினேன்.

    அது இயல்பாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம்தான். அவர்களுக்கு நான் எந்த அறிவுரையோ ஆலோசனையோ கூற மாட்டேன். ஏதாவது தேவைப்பட்டு அவர்களே கேட்டால் மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய இளவயதில் யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்று நடந்ததில்லை.

    எல்லாமே என்னுடைய சுயமுடிவு தான். நான் என் மகள்களுக்கு என்ன சுதந்திரம் கொடுத்து இருக்கிறேனோ அது என் பெற்றோர் எனக்கு கொடுத்தது’ என்று கூறி இருக்கிறார்.
    ×