என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chicken Recipes"
- சிக்கன் வைத்து பலவித உணவுகளை சமைக்கலாம்.
- இன்று சிக்கன் வைத்து மோமோஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
சிக்கன் கொத்துகறி - 1/4 கிலோ
வெங்காயம் - 2
முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
சிக்கன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கன் கொத்துக்கறி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை பந்து போன்று சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதை சிறிய அளவிலான மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும்.
அதன் பின்னர் கிளறி வைத்து உள்ள சிக்கன் கலவையை அந்த சப்பாத்தியில் வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் வைத்து வேக விட வேண்டும்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
தற்போது சுவையான ரெஸ்ட்ரன்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெடி.
- சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
- பட்ட்ர் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
முந்திரி விழுது - 2 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
தயிர் - 1 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி
கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் - அரை தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
செய்முறை :
சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிர், கறிமசாலா, கருப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
சிக்கனை ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.
ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.
பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி.
- காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
- சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கைமா – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.
* அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.
* அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
* சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.
- சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
- மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )
கொத்தமல்லி தழை - சிரிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - ½ கப்
பெரிய வெங்காயம் - 1
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
* பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.
- சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது.
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
தண்ணீர் - சிறிது
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.
குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 10
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.
சிக்கன் - 250 கிராம்,
வரமிளகாய் - 10,
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
உப்பு - தேவைக்கு.
கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
சிக்கன் வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமாக தீயில் வேக விடவும்.
அடுத்து அதில் பொடித்த மசாலாவை போட்டு நன்றாக கிளறி விடவும்.
சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
பர்கர் பேட்டி செய்ய…
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
வெங்காயம் - 1,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
பிரெட் தூள் - 1 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
பர்கர் பரிமாற…
பர்கன் பன் - 4,
சீஸ் ஸ்லைஸ் - 4,
மையோனஸ், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த சிக்கன் கலவையில் சிறிதளவு எடுத்து கட்லெட் போன்று தட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பர்கர் பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பன்னில் உட்புறம் வெண்ணெய் தடவி, செய்த பர்கர் (கட்லெட்) பேட்டியை அதன் நடுவில் வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து மூடி பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.
சிக்கன் - 500 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் கிரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.
ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும்.
இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.
சூப்பரான தவா சிக்கன் தயாராகிவிட்டது.
பார்லி - 1/2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
கேரட் - 1
ப்ரோக்கோலி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1/2 இன்சி
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.
காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.
காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - கால் டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீரில் சிக்கன் வேக வேண்டும். சிக்கனில் தண்ணீர் எல்லாம் வற்றியதும் சிக்கனை மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது சோம்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு வதக்கவும்.
சிக்கனில் நன்றாக மசாலா சேர்ந்து உதிரியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
சிக்கன் - 250 கிராம்,
மைதா - 3 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
முட்டை - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 50 கிராம்,
வெங்காயம் -1,
குடைமிளகாய் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 1,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.
அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.
கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.
கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்