search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andhra Recipes"

    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
    தட்டிய பூண்டு - 30 கிராம்
    வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

    அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திரா ஸ்பெஷலான இந்த ரைஸ் பால்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 4,
    பெருங்காயம் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை: 

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும்.

    பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

    பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பின்னர், சீடை போல உருட்டி, வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சீடைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஆந்திரா ரைஸ் பால்ஸ் ரெடி.

    குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம். அதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள பன்னீர் கிரேவி அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    வெங்காயம் - 2,
    மிளகாய் வற்றல் - 2
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    அரைக்க:

    வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா 3.



    செய்முறை:

    அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

    சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

    இப்போது பன்னீரை சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.

    பச்சை வாசனை போனதும், நெயில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 8
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை ஆந்திராவில் கோழி வெப்புடு என்று சொல்வார்கள். இது சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 200 கிராம்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
    மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 40 மில்லி
    இஞ்சி - பூண்டு விழுது - 15 கிராம்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    தக்காளி, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் ததக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரை ரெடி.

    தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய் - 2
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    வரமிளகாய் - 4
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெல்லம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான பொருட்கள்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்கவும்.

    பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

    அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×