search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Snacks"

    ஆந்திரா ஸ்பெஷலான இந்த ரைஸ் பால்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 4,
    பெருங்காயம் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை: 

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும்.

    பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

    பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பின்னர், சீடை போல உருட்டி, வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சீடைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஆந்திரா ரைஸ் பால்ஸ் ரெடி.

    குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம். அதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 3 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 2 மேசைக் கரண்டி
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 5 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

    வெண்ணெயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

    பிசைந்த மாவின் மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.

    முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை அச்சில் போட்டுக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் மாவை முறுக்குகளாக பிழியந்து பொன்னிரமாக எடுக்கவும்.

    சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×