search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ceremony"

    • அரியலூரில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
    • உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், வாலாஜ நகர ஊராட்சி அலுவலக வளாகத்தில், உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவி அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் நாகமுத்து, மாவட்ட தலைவர் பாண்டியன், துணைச் செயலர் செவ்வேள், உலக திருக்குறள் கூட்டமைப்பு பெரம்பலூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தரராஜன், உலக திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு, கார வகைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. முடிவில் நிர்வாகி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    • சாத்தியக்கூறுகள் என்ற நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
    • பணியாளர்கள் கலியபெருமாள், வேலவன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் எழுதிய இடைநிலை கலை பயிற்சி சிக்கல்கள், சாத்தியக்கூறுகள் என்ற நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    முனைவர் ரவிவர்மா பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரைகளை தொகுத்து நூலாக பதிப்பித்துள்ளார். பேராசிரியர் ஸ்ரீதரன், முனைவர் சரவணன்வேலு, பயிற்றுநர் முருகேவல், உதவி பேராசிரியர்கள் பவித்ரா, பிரியங்கா சர்மா, அலுவலக பணியாளர்கள் கலியபெருமாள், வேலவன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

    • பனை விதை நடவு விழா நடந்தது.
    • முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விசாலயன்கோட்டை கிராம ஊராட்சி இணைந்து சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தலைவர் முனைவர் சேதுகுமணன் ஏற்பாட்டில் ஆயிரம் பனை விதைகள் நடவு விழா நடைபெற்றது.

    விசாலயன்கோட்டை வேதமுத்து நகரில் தொடங்கி வேளாண்மைக் கல்லூரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சொர்ணம் வரவேற்றார்.

    சேதுபாஸ்கரா கல்லூரி முதல்வர்.க.கருணாநிதி, சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் சேது விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், முன்னாள் தலைவர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பனை மரத்தின் சிறப்புகள், பனை விதை நடவு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதன்மை செயல் அதிகாரி கோவிந்தராம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன், பேராசிரியை விஷ்ணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டத்தில் தீபாவளியை முன்னிட்டு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது
    • கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, நலிவுற்ற மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 60 மேற்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றதுஅரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில், நடைபெற்ற இந்த விழாவில் கண்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா சிவப்பிரகாசம், டாக்டர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் ராயல் சென்டீரியல் லயன் சங்கத் தலைவர் வி.கே.ராஜதுரை, செயலாளர் மதிவாணன், வட்டார தலைவர் அன்பரசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், பொருளாளர் ஹரிஹரன், சங்க நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ், அபிநயா, செல் பாலாஜி, மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • திருச்சியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் மலர் தூவி, படையலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
    • அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது

    திருச்சி,

    இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர்.

    கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை மேலப்புதூர் ஆரோக்கிய அன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா தேவாலயம், எடத்தெரு பழைய கோவில், மெயின்கார்டுகேட் லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா மாதா சர்ச், பொன்மலை ஜோசப் ஆலயம், கிராப்பட்டி புனித தெரசா ஆலயம், காட்டூர் அந்தோணியார் கோவில், குழந்தை யேசு கோவில், ஸ்ரீரங்கம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் முன்னோர்களின் ஆன்ம நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் அதற்கு பின்னர், மேலப்புதூர் உத்திரிக்க மாதா, மார்சிங்பேட்டை ஆங்கிலோ இந்தியன், கோர்ட் ரவுண்டானா அருகில் மற்றும் அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள சி.எஸ்.ஐ., காட்டூர், மணல்வாரித்துறை, ஆண்டாள் வீதி, ஜி கார்னர், ெபான்மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்றனர்.

    அங்கு கல்லறைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, பூக்களை தூவி, இறந்தவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை படையல் வைத்தனர். பின்னர் மெழுகுதிரி ஏந்தி, உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைவு கூர்ந்து, முன்னோர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் முன்னோர்கள் நினைவாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு, ஆடைகள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை செய்தனர்.

    கல்லறை திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு மேலப்புதூர், மார்சிங்பேட்டை, கோர்ட் ரவுண்டானா, அரிஸ்டோ ரவுண்டானா, ஜி கார்னர் உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    • மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்க விழா நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மருத்துவர் உமா தலைமை வகித்தார்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்கமாக, மரக் கன்றுகளை நட்டார்.

    அப்போது வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நாவல் மரம், இலுப்பை மரம், புளிய மரம், மகாகனி மரம், நீர் மருது தலா 250 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    காற்றிலுள்ள மாசினைக் கட்டுப்படுத்த, கரியமில வாயுவின் அளவைக் குறைத்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், தேவையான அளவு மழைப்பொழிவைப் பெறவும் குறுங்காடுகள் உதவுகின்றன. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் மியாவாக்கி முறையாகும். இந்த முறையில் குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும். மியாவாக்கி முறையினால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும், பொதுவாக இந்த முறையில் மரங்கள் இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.

    கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து அல்லது புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கலாம் அல்லது பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கலாம். குறுங்காடுகள் உருவாக்குவதால் பல உயிரினங்கள் பயனடையக் கூடும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான காலி நிலங்கள் இருப்பின் அவற்றிலும் குறுங்காடுகளை அமைக்கலாம். மேலும், இந்த மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், துணைத் தலைமை ரசாயனர் சந்திரசேகரன், கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுலக மேலாளர் கணபதி, சிவில் பொறியாளர் தங்கவேலு, சர்க்கரை ஆலை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் சேமிப்பு தின விழா நடைபெற்றது
    • மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது

    கந்தர்வக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிக்கன மற்றும் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியை சிந்தியா அனை வரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி அஞ்சலகத்தின் கிளை அஞ்சல் அலுவலர் மோகன்தாஸ் மாணவர்கள் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரமேதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்விஜாய் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
    • மாவட்ட மைய நூலகத்தில் முதல் நிலை நூலகர் தலைமையில் நடந்தது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், சித்த மருத்துவர் வேலுச்சாமி எழுதிய சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் ஷான்பாஷா தலைமை தாங்கி, இந்நூலுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகத்தின் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற நூல்களை மருத்துவர் வேலுச்சாமி தொடர்ந்து எழுத வேண்டும் என்றார். நூலின் ஆசிரியர் வேலுச்சாமி, நூலின் முதல் பிரதியை சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரையிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நூலகர் செசிராபூ நூலக பணியாளர்கள் வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் ஆசிரியர் செவ்வேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் வாசகர்கள், நூலக புரவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.
    • செயல் அலுவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரிபவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஆன்மீக பயிற்சி வகுப்பு மற்றும் தமிழக அரசின் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

    கோவில் செயல் அலுவலர் முருகையன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொழில்நுட்ப கல்வித்துறையில் பணிபுரியும் அன்பு பாரதம் போட்டி தேர்வு பயிற்சி மைய நிறுவனர் குட்டியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பயிற்சியாளர் வீர பைரவன் (ஆய்மூர் வி.ஏ. ஓ), பயிற்சியாளர் ஸ்ரீனிவாசன், வக்கீல் நாகராஜன், சர்வாலய அருட்பணி மற்றும் அறப்பணி குழுவை சேர்ந்த ஜெய்பிரகாஷ், முருகன், அரசு வக்கீல் பாஸ்கர் மற்றும் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் அன்பு பாரதம் போட்டி தேர்விற்கான பயிற்சி மையத்தின் ஒத்துழைப்போடு கோவில் நிர்வாகத்துடன் இணைந்து கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் பயிற்சி நடத்த உள்ளது. இதன் மூலம் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவர்.

    இந்த பயிற்சியை போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களும், பொதுமக்களும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோவில் செயல் அலுவலர் முருகையன் கேட்டுக்கொண்டார். முடிவில் அரசு வக்கீல் பாஸ்கர் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் செய்திருந்தது. தமிழக அரசு அறிவித்துள்ள கோவில் செயல் அலு வலர் தேர்வி ற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரி பவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

    • சு. ஆடுதுறை கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயர், வீரபத்திரர் இருளப்பர், மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை வருண பூஜை அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.கும்பாபிஷேகமத்தை முன்னிட்டு மேலும் மங்கள வாத்தியங்கள் , செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • விராலிமலையில் நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
    • 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்

    விராலிமலை,

    விராலிமலை இசை வேளாளர் சமூக அறப்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் விஜய தசமியை முன்னிட்டு நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கமலா பாலா திருமண மண்டபத்தில் நடந்தது.அறக்கட்டளை தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். பொருளாளர் மாணிக்கம், கருப்பையா, மாரியப்பன், ஜெயராமன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நாதஸ்வர வித்வான்கள் பின்னை மாநகர் உத்திராபதி, விருத்தாசலம் சங்கர், மன்னார்குடி வெங்கடேசன், தவில் வித்வான் கார்த்திக் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இசை பயிற்சி குறித்து ஆலோசனைகள் கூறினர்.தஞ்சை அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வ கணபதி நாதஸ்வரம் தவில் இசை கருவிகள் பற்றியும், பிரபல பித்வான்கள் பற்றியும் பேசினார்.தொடர்ந்து சரஸ்வதி தேவி பூஜை செய்து வகுப்புகள் துவங்கப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் இசை வேளாளர் சங்க நிர்வாகிகள், அறக்கட்டளை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக நாகராஜன் வரவேற்றார். முடிவில் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

    • நவராத்திரி நிறைவு விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
    • விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்

    விராலிமலை,

    விராலிமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடந்தது.விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் சுப்ரமணி யசுவாமி வள்ளி தெய்வா னையுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இங்கு வருடம் தோறும் தைபூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உட்பட பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி 10 நாள் விழாவானது கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றுமுதல் மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலுக்கல் அமைத்து விநாயகர் பூஜையுடன் நவராத்திரி முதல் நாள் விழாவானது தொடங்கியது. அன்று முதல் தினமும் சுப்ரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

    இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று இரவு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

    ×