search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுங்காடுகள்"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 600 மரக்கன்றுகள் நடபட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    வேர்கள் அறக் கட்டளை தலைவர் வடிவேலு சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக புன்னை, மாமரம், நாவல், பாதாம், புங்கன், மயில்கொன்றை, மகோகனி, தென்னை, வேங்கை உட்பட 600 மரக்கன்றுகள் நடபட்டது. இதில் சப்-கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    • மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்க விழா நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மருத்துவர் உமா தலைமை வகித்தார்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்கமாக, மரக் கன்றுகளை நட்டார்.

    அப்போது வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நாவல் மரம், இலுப்பை மரம், புளிய மரம், மகாகனி மரம், நீர் மருது தலா 250 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    காற்றிலுள்ள மாசினைக் கட்டுப்படுத்த, கரியமில வாயுவின் அளவைக் குறைத்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், தேவையான அளவு மழைப்பொழிவைப் பெறவும் குறுங்காடுகள் உதவுகின்றன. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் மியாவாக்கி முறையாகும். இந்த முறையில் குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும். மியாவாக்கி முறையினால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும், பொதுவாக இந்த முறையில் மரங்கள் இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.

    கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து அல்லது புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கலாம் அல்லது பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கலாம். குறுங்காடுகள் உருவாக்குவதால் பல உயிரினங்கள் பயனடையக் கூடும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான காலி நிலங்கள் இருப்பின் அவற்றிலும் குறுங்காடுகளை அமைக்கலாம். மேலும், இந்த மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், துணைத் தலைமை ரசாயனர் சந்திரசேகரன், கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுலக மேலாளர் கணபதி, சிவில் பொறியாளர் தங்கவேலு, சர்க்கரை ஆலை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடந்தது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியவரிகம் ஊராட்சி பகுதியில் உள்ள ஆம்பூர் டெக் துத்திப்பட்டு சி.இ.டி.பி பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் பண்புகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இவர்களுடன் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் தற்போதைய வனப்பரப்பு 22.71 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திண்டிமாவனம் சார்பில் 2 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    உலகின் பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்து உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்தன.

    இதுபோன்று பல்வேறு நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து கார்பன் வெளியேற்றத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக மரங்களை நட்டு மழை வளத்தை பெருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தின் தற்போதைய வனப்பரப்பு 22.71 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10 ஆயிரம் குறுங்காடுகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து சுற்றுச்சூ ழல்துைற அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் அனைத்து மாவட்டங்க ளிலும் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திண்டிமாவனம் சார்பில் 2 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி வளாகத்தில் ஒரு குறுங்காடும், பொன்மாந்துறை பகுதியில் ஒரு குறுங்காடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுங்காடுகள் வளர்ப்பில் தமிழகத்திலயே திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

    தற்போது மழைக்காலம் என்பதால் மரக்கன்றுகளை அடர்த்தியாக நடவு செய்தால் பராமரிப்பு இல்லாமலேயே வெகுவாக வளர்ச்சி அடையும். இதில் நெட்டையாக வளரும் மரங்கள், குட்டையாக வளரும் மரங்கள், பயன்தரும் மரங்கள் என அனைத்தையும் கலந்து நடவேண்டும். இதன் மூலம் பசுமை வளம் பாதுகாக்கப்படுதுடன் இயற்கை சூழலுக்கும் ஏற்றதாக அமையும்.

    பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த குறுங்காடுகள் மிகவும் உதவியாக உள்ளது. நகர்புறங்களில் ஏற்படும் மாசை கட்டுப்படுத்தி ஆக்சிசன்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் இந்த குறுங்காடுகள் திகழ்கின்றன. இதுேபான்ற குறுங்காடுகள் அமைக்கும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×