என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small shops"

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடந்தது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியவரிகம் ஊராட்சி பகுதியில் உள்ள ஆம்பூர் டெக் துத்திப்பட்டு சி.இ.டி.பி பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் பண்புகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இவர்களுடன் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 600 மரக்கன்றுகள் நடபட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    வேர்கள் அறக் கட்டளை தலைவர் வடிவேலு சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக புன்னை, மாமரம், நாவல், பாதாம், புங்கன், மயில்கொன்றை, மகோகனி, தென்னை, வேங்கை உட்பட 600 மரக்கன்றுகள் நடபட்டது. இதில் சப்-கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×