search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bramorchavam"

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து காலை தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதி உலா வருகிறார். வருகிற 2-ந் தேதி கருட சேவையும், 4-ம் தேதி தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சாரங்கபாணி பெருமாளுடன், கோமளவல்லி தாயார் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படும். பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக பொங்கல் தினத்தன்று தேரோட்டம் நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து நேற்று இரவு வெள்ளி இந்திர விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. வருகிற 16-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. இதில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.

    தேரோட்டத்தை தொடர்ந்து சக்கரத்தாழ்வார், சக்கரவர்த்தி திருமகன் பொற்றாமரை குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி வரை படி பூஜைகளும், 26-ந்தேதி ஐயப்பன் வெள்ளிரத ஊர்வலமும் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. சபரிமலை பிரதான தந்திரி டி.கே.எம்.எம்.மகேஷ்மோகளு குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள் நடைபெற உள்ளன.

    27-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 1-ந்தேதி மாலை 6 மணிக்கு 18-ம்படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

    8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

    கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதி உலா வந்தார்.

    விழாவின் 8-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் குதிரை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது.
    திருச்சானூரில் நடந்து வரும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில், ‘திரிவிக்ரமன்’ அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், ‘திரிவிக்ரமன்’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நண்பகல் 12 மணியில் இருந்து 2.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஜான்சிராணி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டிபாஸ்கர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.15 மணியளவில் தேரோட்டமும், இரவு குதிரை வாகன வீதிஉலாவும் நடக்கிறது. 
    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான கல்ப விருட்ச, இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பலர் சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். கேரள செண்டை மேளம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து 2 மணிவரை கோவிலுக்குள் உள்ள ஸ்ரீகிரு‌ஷ்ணர் மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

    பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10.30 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வீதிஉலாவில் திருப்பதி இணை அதிகாரி போலா.பாஸ்கர், கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி, கோவில் அதிகாரிகள், துணை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. காலை 8.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

    கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டுகள் மல்லீஸ்வரி, குமார், கோபாலகிரு‌ஷ்ணா, உதவி பறக்கும்படை அதிகாரி நந்தீஸ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சிறிய சே‌ஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 10 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் அனைத்து சேவை நிகழ்ச்சியும், சரநாராயண பெருமாள் கோவிலில் நடைபெறும் என்பது சிறப்பாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏக தின பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சரநாராயண பெருமாள், திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு தோமால சேவை நடந்தது. பின்னர் 7 மணிக்கு ஏகதின பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், மதியம் 12 மணிக்கு கருட வாகனத்திலும், 3 மணிக்கு யானை வாகனத்திலும், 4 மணிக்கு சூர்ணோத்சவமும், மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்திலும் உற்சவரான சரநாராயண பெருமாள் எழுந்தருளி, கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையடுத்து மாலை 6 மணிக்கு கோவிலில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த சிறிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சரநாராயண பெருமாள் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட கோவில் உள்பிரகாரத்தை தேர் சுற்றி வந்தது. பின்னர் 7.20 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில் அமைச்சர் எம்.சி. சம்பத், வர்த்தக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேருக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக சென்றன.

    தேரோட்டத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராயப்பாடி சாம்பசிவராவ், சுதா நாராயணமூர்த்தி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, பறக்கும் படை அதிகாரி ரவீந்திராரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் உற்சவர்களை ஊஞ்சல் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

    வெங்கடேசப் பெருமாள் அடுத்து எடுக்கப்போகும் கல்கி அவதாரத்துக்கு முன்னோட்டமாகவும், ஏற்கனவே எடுத்த ஹயக்ரீவ அவதாரத்தில் குதிரை முகத்துடன் அவதரித்ததை நினைவுக்கூறும் வகையிலும் குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் தேசிகருக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 750-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் தேசிகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் தேவநாதசுவாமிக்கும், தேசிகருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனை தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து தேசிகர், அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வரப்பட்டார். தேரில் அமரவைக்கப்பட்ட தேசிகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் டிராக்டர்களில் தேரின் வடம் கட்டி, இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் தேசிகரை பக்தர்கள் வழிபட்டனர்.

    பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் விழாவான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேசிகர், ரத்தினங்கி சேவை அலங்காரத்தில் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் காட்சி அளிக்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு தேவநாதசுவாமி, ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளுக்கு சென்று தேசிகர் வழிபடுகிறார். பின்னர் இரவில் கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் திருமஞ்சனம், மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப்பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது.

    நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு யாக சாலை ஹோமம், திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது.

    விழாவில், தினசரி யாகசாலை பூஜையும், இரவு சாமி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திர வரதராஜபெருமாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புரட்டாசி திருவோண கருட சேவையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது. 22-ந்தேதி (சனிக்கிழமை) புஷ்ப யாகம், பூர்ணாகுதி உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.

    23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலை ஹோமமும், மாலை 6 மணிக்கு 108 கலசாபிஷேகம், ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. 
    ×