search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padmavathi thayar"

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

    8-வது நாளான நேற்றிரவு குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று காலை கோவில் அருகேயுள்ள பஞ்சமி தீர்த்த தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

    இதற்காக திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியை கான நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் கோவில் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

    கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற சம்பவங்கள் தடுக்கவும் திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 டி.எஸ்.பி.க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம், நித்ய கைங்கர்யம், அபிஷேகம் ஆகியவை நடந்தன.

    காலை 6 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.



    முன்னதாக திரளான பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை தட்டுகளில் வைத்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனை கோவில் சன்னதியில் வைத்து, சாமி தரிசனம் செய்த பெண் பக்தர்களுக்கு அந்த மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.

    குங்கும அர்ச்சனையாலும், கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாலும் கோவிலில் வழக்கம்போல் நடந்து வந்த குங்கும அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம் மற்றும் வாரத்தில், மாதத்தில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் தொடங்கி நடக்கும் எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் அதிகாரிகளுடன் திருப்பதி துணை அதிகாரி போலா.பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்ய வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவை நடைபெறும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்போது பக்தர்களுக்கு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழா வண்ணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது எவ்வாறு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டதோ அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்ய வேண்டும்.

    பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.

    பிரம்மோற்சவ விழா நடைபெறக்கூடிய நாட்களில் நான்கு மாட வீதிகளில் 10 எல்.இ.டி. கேலரிகளும் பஞ்சமி தீர்த்தம் அன்று கூடுதலாக 8 கேலரிகளும் அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யபட உள்ளது. சுவாமி வீதி உலாவின்போது ஊர்வலத்தின் முன்பு பல்வேறு மாநிலங்களில் உள்ள கலைக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×