என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அர்ச்சகர்கள் குங்கும லட்சார்ச்சனை செய்தபோது எடுத்தபடம்.
    X
    உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அர்ச்சகர்கள் குங்கும லட்சார்ச்சனை செய்தபோது எடுத்தபடம்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை

    ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம், நித்ய கைங்கர்யம், அபிஷேகம் ஆகியவை நடந்தன.

    காலை 6 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணசாமி முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் லட்ச குங்கும அர்ச்சனை செய்தனர்.



    முன்னதாக திரளான பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை தட்டுகளில் வைத்து, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனை கோவில் சன்னதியில் வைத்து, சாமி தரிசனம் செய்த பெண் பக்தர்களுக்கு அந்த மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.

    குங்கும அர்ச்சனையாலும், கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாலும் கோவிலில் வழக்கம்போல் நடந்து வந்த குங்கும அர்ச்சனை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம் மற்றும் வாரத்தில், மாதத்தில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் தொடங்கி நடக்கும் எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×