search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birds"

    • திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை பெற்றது.
    • வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான இந்த வடுவூர் ஏரிக்கு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருக்கும்.

    முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியில் தொடங்கும் அலையாத்திக்காடு ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ் காடாக உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி பறவைகள் வரக்கூடிய அனைத்து நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு வனத்துறை சார்பில் 2 கட்டமாக நடைபெறும்.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது.

    வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அறிவொழி, துணை கலெக்டர் கீர்த்தனாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 102 இனங்கள் காணப்பட்டது பறவை ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்ட கணக்கெடுப்பில் வடுவூர் ஏரி, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் உள்பட 20 நீர்நிலைகளில் 102 பறவை இனங்கள் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது.

    நத்தை கொத்தி நாரை, சிறிய உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், நாம கோழி, நெடுங்கால் உள்ளான், நீர் காகம், ஐரோப்பா கரண்டிவாயன், ஆலா, மடையான் ஆகிய இனங்களில் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தங்கி இருப்பது தெரிய வந்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் நீர் நிலைகளில் தங்கி உள்ளது. ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் கட்ட கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

    • பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

    இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.

    அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுவினர் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.

    இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.

    தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

    • இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.

    கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.

    • மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
    • குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.

    திருப்பூர் : 

    திருப்பூர் நஞ்சராயன் குளம் தமிழகத்தின், 17 -வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.

    கடந்த மாதம் ரஷ்யா, மங்கோலியா பகுதிகளில் இருந்து வரும் பட்டைத்தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறு கொசு உள்ளான், பேதை உள்ளான், மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.

    இதுமட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர் காகம், பழுப்பு நாரை, மடையன், கரண்டிவாயன், நெடுங்கால் உள்ளான், புள்ளிமூக்கு வாத்து, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, மீன்கொத்திகள் என பறவைகள் வந்தன. வழக்கமாக கூட்டமாக வரும் பறவையினங்கள் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:- வெளிநாட்டு பறவைகள், குளிர்கால வலசையாக நஞ்சராயன்குளம் வந்துள்ளன. வழக்கமாக 100 முதல் 200க்கும் அதிகமான பறவைகள் கூட்டமாக வந்து செல்லும். இம்முறை 20க்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன. குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.

    வெளிநாட்டு பறவைகள் தண்ணீரில் நடந்து சென்றுதான் உணவு தேடும். ஆழமான குளம், தண்ணீர் அதிகம் உள்ள குளங்களில் தங்காது. குளத்தில் அதிகம் தண்ணீர் இருப்பதால் அருகே உள்ள மற்ற பகுதிக்கு சென்றிருக்கும்.கோவை, ஈரோடு பகுதியிலும் பறவை வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏழு குளம் என்று அழைக்கப்படும் குளங்களின் நீர் மட்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் செங்குளத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன. செங்குளம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பாசன பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர், கால்வாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை அடுத்தடுத்துள்ள ஏழு குளம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 10 மாதங்களுக்குள் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசாணை வருகிறதோ? அந்த அளவு தண்ணீர் அந்த காலத்திற்குள், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவையைப்பொறுத்து விடப்படும்.

    அதன்படி ஒட்டுக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது தண்ணீர் கேட்காத நிலையில் அவர்கள் கேட்கும்போது விட அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதனால் அந்த குளம் தவிர மற்ற 7குளங்களுக்கும் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதனால் இந்த குளங்களின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பள்ளபாளையம் அருகில் உள்ள செங்குளத்திற்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. கொக்குகள், நாரைகள் மற்றும் நீர்க்கோழிகள் அதிகமாக வந்துள்ளன.நீர்க்கோழிகள் கூட்டமாக குளத்துதண்ணீரில் நீந்தி செல்கின்றன.கரையோரங்களில் கொக்குகள் மற்றும் நாரைகள் தண்ணீரில் மீன்களை தேடுகின்றன.மீன்கள் தென்பட்டதும் அதை கொக்குகளும், நாரைகளும் கொத்தி தின்கின்றன.இடையிடையே அவை குளத்திற்குள் உள்ள மரங்களில் கூட்டமாக உட்கார்ந்து இளைப்பாறுகின்றன.

    • 1 தீவு சுமார் 5000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்த தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏரியானது தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரம் ஏரியில் இன்று வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலர்கள், கவின்மிகு இயக்கம் தஞ்சை சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சை சமுத்திரம் ஏரி பொதுப்பணித்துறை, கல்லணை கோட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து சமுத்திரம் ஏரியில் 3 தீவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மரங்கள் நடப்பட்டு அது பறவைகள் வாழ்விடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 1 தீவு சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்தத் தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன. மேலும் இரண்டு தீவுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக தீவுகளின் பரப்பளவு 1 ஏக்கர் அளவில் இருக்கும். இந்த தீவுகள் அனைத்திலும் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் இதற்காக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கவின்மிகு தஞ்சை நிர்வாகிகளுக்கும் குறிப்பாக டாக்டர் ராதிகா மைக்கேல், பாண்டியன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமுத்திரம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது. இதன் மதிப்பு ரூ.8.8 கோடி ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    கஜா புயலால் கோடியக்காடு வன விலங்குகள் சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரக்குவியல்களாகவே காணப்பட்டன. இதனால் வன விலங்குகளின் கதி என்ன ஆனது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதீஷ் கிடிசாலா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது,



    கஜா புயல் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயலால் 17 வெளிமான்களும், ஒரு புள்ளி மானும், 4 பன்றிகளும், 373 பறவைகளும் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணி இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும், அப்போது இறந்த விலங்குகள், பறவைகள் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

    பொலிவிழந்த நிலையில் உள்ள கோடியக்காட்டில் முன்புபோல் மரங்கள், மூலிகைச் செடிகளை நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone

    ×