search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Award Ceremony"

    • 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
    • மாணவர்களிடையே உழைப்பின் நோக்கம் வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர்,காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கோவை பேன்டெக்ஸ் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான ஏ.கே.எஸ்.பி.தனசேகர் மற்றும் பொள்ளாச்சி பாரதி வித்யா பவன் பள்ளியின் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான

    ஏ. செந்தில்குமார் காளிய ங்கராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ ர்களிடையே உழைப்பின் நோக்கம்வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினர்.இதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி,விளையாட்டு, தமிழ் மன்றம், ஆங்கில மன்றம் போன்ற பல மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்க ளுக்கும், ஐஐடி, ஜேஇஇ ஒலிம்பியாய்டு, விவிஎம் ஆகிய போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கல்வி,விளையாட்டுப் போ ட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.முன்னதாகப் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் தாளாளர். கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். பள்ளியின் பொருளாளர் .லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் .ஜி பிரமோதினி வரவேற்றுப் பேசினார்.இறுதியாகப் பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.நித்யா நன்றியுரை வழ ங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனாவுடன் இணைந்து பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
    • முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.

     திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். 

    • வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.

    • குருசாமிபாளையம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் 100 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்க ரூ.2 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ரவி கலந்து கொண்டு 65 புரவலர்களுக்கு பட்டயம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 9 பேர் புதிய புரவலராக சேர்ந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் 100 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்க ரூ.2 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் தாளமுத்து தலைமை தாங்கினார். சதானந்தம் வரவேற்றார். பிள்ளா நல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    ஊர் பெரிய தனக்காரர் ராஜேந்திரன், செங்குந்தர் மகாஜனப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி, நாகராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமன், டி.எஸ்.குணசேகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட நிர்வாகிகள் அலமேலு நாகமாணிக்கம், ஜோதி, சக்திவேல், சீனிவாசன், சண்முகசுந்தரம், கார்த்திகேயன், மேகநாதன், உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.

    பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நாராயணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி , முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை திருவிழா காலங்களுடன் பிணைந்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் நலன் காக்க கரும்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்றார். 

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

    • வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் காந்திகிராமம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
    • இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் காந்திகிராமம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

    நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தடகளப் போட்டியில் பெண்கள் பிரிவில் கலந்து வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று வெற்றி பெற்றனர். இதுபோன்று பல்வேறு தடகளப் போட்டியில் மாணவர்களும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.

    இந்த மாணவ-மாணவிகளை பாராட்டி நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலர் வினேஷ் பிரபு, பள்ளி தலைமையாசிரியர் சீதாலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் சபரி மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி அருகே உள்ள ஆரம்பப்பள்ளியில் தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொடுகுபட்டியில் அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தியாகி அப்பைய ரெட்டியார் பரிசுகள் வழங்கினார். முடிவில் ஆசிரியர் எஸ்தர் டார்த்தி, ஆனந்தி ஆகியோர் நன்றி கூறினர்.

    இதேபோல் வாடிப்பட்டி புனித சார்லஸ் ஆரம்பப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆஞ்சிலோ அதிபர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். புஸ்கோ பள்ளி நிர்வாகி கலின், தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவர்களுக்கு போலீஸ் சப்-ன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார். சுதந்திர தின சிறப்புகள் பற்றி சதானந்தம் விளக்கி பேசினார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    • பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடைபெற்றது.
    • விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா நடைபெற்றது. விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    அன்பே சிவம் அறக்கட்டளைத் தலைவர் ஜெயந்தி ராஜவேலு முன்னிலை வகித்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணணன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய துரை.மாலிறையன், சுனிதி, சாயபு மரைக்காயர், நசீமாபானு, கிருஷ்ணகுமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கியதுடன் மன்னர் மன்னன் அறக்கட்டளை நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுதப்பெரு விழா சிறப்புக் கவியரங்கம் விடுதலை வாழ்க என்ற தலைப்பில் நடைபெற்றது. 40 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

    செல்வதுரை நீஸ், படைப்பாளி ரமேஷ் பைரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக் கவிஞர் விசாலாட்சி வரவேற்றார். முடிவில் செயலர் வள்ளி நன்றி கூறினார்.

    • மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளான திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு கொத்தம்புரிநத்தம் ,திருவண்டார் கோவில், கலித்தீர்த்தாள் குப்பம் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வெற்றி பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    மேலும் சிறப்பாக கல்வி கற்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விழா நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×