search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறகுபந்து போட்டி"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 1,500 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருப் பத்தூர் மாவட்ட அளவில் அரசு அலுவலர்களுக்கு முதல்- அமைச்சர்கோப்பைக்கான செஸ்-இறகுபந்து போட்டி தொடங்கியுள்ளது.

    செஸ்போட்டிதூயநெஞ்ச கல்லூரியிலும் இறகுபந்து போட்டி கருப்பனூரிலும் தொடங்கியது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து விளை யாடினார்.

    செஸ் போட்டிகளில் 81 அரசு துறை சார்ந்த பணி யாளர்களும், இறகு பந்து போட்டிகளில் 1,500 அரசு துறை சார்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டு விளையாடினர்.

    இதனை தொடர்ந்து பழைய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள் ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 35 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட் டைகள் மற்றும் மாணவர்களுக்கு ரூ3 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மன நல மருத்துவர் பிரபாவராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர்கள் ஆனந்த், வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி நடைபெறுகிறது.
    • ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் திண்டுக்கல், கோவை, மதுரை உள்பட 27 மாவட்டங்களில் இருந்து 90 பேர் கலந்து கொண்டுள்ளனர். உடற்தகுதி அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்ெவாரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ச

    க்கர நாற்காலியில் அமர்ந்தபடி இறகுபந்து போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு கூடியிருந்த நபர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு நாளை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    ×