search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அலுவலர்களுக்கான செஸ்-இறகுபந்து போட்டி
    X

    அரசு அலுவலர்களுக்கான செஸ்-இறகுபந்து போட்டி

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 1,500 பேர் கலந்து கொண்டு விளையாடினர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருப் பத்தூர் மாவட்ட அளவில் அரசு அலுவலர்களுக்கு முதல்- அமைச்சர்கோப்பைக்கான செஸ்-இறகுபந்து போட்டி தொடங்கியுள்ளது.

    செஸ்போட்டிதூயநெஞ்ச கல்லூரியிலும் இறகுபந்து போட்டி கருப்பனூரிலும் தொடங்கியது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து விளை யாடினார்.

    செஸ் போட்டிகளில் 81 அரசு துறை சார்ந்த பணி யாளர்களும், இறகு பந்து போட்டிகளில் 1,500 அரசு துறை சார்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டு விளையாடினர்.

    இதனை தொடர்ந்து பழைய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கு வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள் ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 35 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட் டைகள் மற்றும் மாணவர்களுக்கு ரூ3 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மன நல மருத்துவர் பிரபாவராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர்கள் ஆனந்த், வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×