search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா
    X

    தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா

    • வாடிப்பட்டி அருகே உள்ள ஆரம்பப்பள்ளியில் தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொடுகுபட்டியில் அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தியாகி அப்பைய ரெட்டியார் பரிசுகள் வழங்கினார். முடிவில் ஆசிரியர் எஸ்தர் டார்த்தி, ஆனந்தி ஆகியோர் நன்றி கூறினர்.

    இதேபோல் வாடிப்பட்டி புனித சார்லஸ் ஆரம்பப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆஞ்சிலோ அதிபர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். புஸ்கோ பள்ளி நிர்வாகி கலின், தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவர்களுக்கு போலீஸ் சப்-ன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார். சுதந்திர தின சிறப்புகள் பற்றி சதானந்தம் விளக்கி பேசினார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    Next Story
    ×