என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா
- வாடிப்பட்டி அருகே உள்ள ஆரம்பப்பள்ளியில் தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொடுகுபட்டியில் அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தியாகி அப்பைய ரெட்டியார் பரிசுகள் வழங்கினார். முடிவில் ஆசிரியர் எஸ்தர் டார்த்தி, ஆனந்தி ஆகியோர் நன்றி கூறினர்.
இதேபோல் வாடிப்பட்டி புனித சார்லஸ் ஆரம்பப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆஞ்சிலோ அதிபர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். புஸ்கோ பள்ளி நிர்வாகி கலின், தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவர்களுக்கு போலீஸ் சப்-ன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார். சுதந்திர தின சிறப்புகள் பற்றி சதானந்தம் விளக்கி பேசினார்.
முடிவில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்