search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • 52ஆயிரத்து 902கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.06 க்கும், குறைந்தபட்சம் ரூ.55.15க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று செவ்வாய்கிழமை 121விவசாயிகள் கலந்து கொண்டு 52ஆயிரத்து 902கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.06 க்கும், குறைந்தபட்சம் ரூ.55.15க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்த ரூ.36லட்சத்து12ஆயிரத்து 551க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • விவசாயிகள் கலந்து கொண்டு 56 ஆயிரத்து 695 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.46.17க்கும், குறைந்தபட்சம் ரூ.38.91க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 78 விவசாயிகள் கலந்து கொண்டு 56 ஆயிரத்து 695 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 4 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.46.17க்கும், குறைந்தபட்சம் ரூ.38.91க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 14ஆயிரத்து 702க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது.
    • ரூ. 2000 முதல் ரூ.7322 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் விளையும் பஞ்சுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் ஆர்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ.7322 வரையிலும் மட்ட ரக பருத்தி ரூ. 2000 முதல் 3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 6.77 லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது.
    • சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது.

    காங்கயம் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 3-ந் தேதிமுதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மூலனூா், வெள்ளக்கோவில், கொடுமுடி, சிவகிரி ஆகிய பகுதிகளிலும் பல விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனா். முத்தூா் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இத்துடன் எள் விற்பனையும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

    இதையடுத்து வணிகா்கள், உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடப்பு எள் அறுவடைப்பருவம் முடியும் வரை ஜூன் 3 -ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முத்தூா் விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் எள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • நிலக்கடலை குவிண்டால் ரூ.6,100 முதல் ரூ.7,300 வரை ஏலம் போனது.

    அவினாசி :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம்போனது.

    ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.16½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.23.51-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 965-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 189.49½ குவிண்டால் எடை கொண்ட 408 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.30-க்கும், சராசரி விலையாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.39-க்கும், சராசரி விலையாக ரூ.73.16-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 532-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 388.31 குவிண்டால் எடை கொண்ட 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது.

    இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.155.00-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.151.99-க்கும் விலைபோனது.

    வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.158.99-க்கும், சராசரி விலையாக ரூ.158.99-க்கும் என மொத்தம் ரூ.56 லட்சத்து 42 ஆயிரத்து 684-க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.
    • 4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது.

    நியூயார்க்:

    1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது.

    இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும். இந்த பைபிளை ருமேனியாவிற்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஆல்பிரட் மோசஸ், வாங்கி இருந்தார்.

    இந்த ஹீப்ரு மொழி பைபிள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

    4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது. இந்த பைபிள், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள யூத மக்களின் அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கப்படும் என்று சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் தூதர் மோசஸ் கூறும்போது, 'ஹீப்ரு பைபிள் வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்கது. மேற்கத்திய நாகரீகத்தின் அடித்தளமாக உள்ளது. இது யூத மக்களுக்கு சொந்தமானது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

    1994-ம் ஆண்டு லியொனார்டோ டாவின்சியின் கோடெக்ஸ் லீசெஸ்டர் கையெழுத்து பிரதி 30.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதை ஹீப்ரு பைபிள் முறியடித்தது.

    இதன்மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட மிக மதிப்பு மிக்க கையெழுத்து பிரதி என்ற சாதனையை படைத்தது.

    • கரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.71.55 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது
    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    கரூர்,

    கரூர் அருகே சாலைப்புதூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாரந்தோறும் கரூர் ஒன்றியம் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.19-க்கும் சராசரியாக ரூ.23.51 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய் பருப்பு முதல் தரம் கிலோ அதிகபட்சமாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்சமாக ரூ.74.30-க்கும், சராசரியாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2ம் தரம் தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ரூ.77.86-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.39-க்கும், சராசரியாக ரூ.73.16 என மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 532 ரூபாய்க்கு விற்பனையானது.தொடர்ந்து 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ அதிகபட்சமாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.139.99-க்கும், சராசரியாக ரூ.155-க்கு விற்பனையானது. வெள்ளை எள் கிலோ அதிகபட்சமாக ரூ.158.99-க்கும் குறைந்தபட்சமாக ரூ.158.99-க்கும், சராசரியாக ரூ.158.99 என மொத்தம் 56 லட்சத்து 42 ஆயிரத்து, 684 ரூபாய்க்கு விற்பனையானது. வேளாண் பொருட்கள் மொத்தம் 71 லட்சத்து 55 ஆயிரத்து 181 ரூபாய்க்கு விற்பனையானது.

    • 49 மூட்டைகளில் தேங்காய் பருப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம் போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 49 மூட்டைகளில் (2445 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.86 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 9 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 325 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,300 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத 23 கடைகளில் 11 கடைகள் மற்றும் உணவகம், கட்டண கழிப்பிடம் உள்ளிட்டவைகள் வைப்பு தொகையுடன் மாத வாடகைக்கு ஏலம் விடப்பட்டது.

    இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள், துப்புரவு ஆய்யாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்தளத்தில் உள்ள எண்.3 மற்றும் எண்.9 கடைகளுக்கு யாரும் வைப்பு தொகை கட்டவில்லை. இதனால் அந்த கடைகள் ஏலம் போகவில்லை. ஏலம்போகாத கடைகள் மறு ஏலத்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏலம் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி போலீஸ் நிலையங்களில் 469 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    நெல்லை:

     நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் 369 இருசக்கர வாகனங்கள், சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்தில் 100 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அரசிற்கு ஆதாயம் பெறும் பொருட்டு யாரும் உரிமை கோராத நிலையில் உள்ள இரு சக்கர வாகனங்கள் அரசின் வழிமுறைகளுக்குட்பட்டு வருகிற 16-ந் தேதி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைத்திலும், 17-ந் தேதி சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்திலும் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மொத்தம் ரூ‌.2 லட்சத்து 87 ஆயிரத்து 642-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்க–ளின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முத்தூர் நகர சுற்றுவட்டார மற்றும் ஈரோடு, கரூர் மாவட்ட கிராமப்–பகுதிகளில் கடந்த 2 வார காலமாக எள் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் தொடங்கி நடத்திட தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேளாண் மற்றும் விற்பனை வணிகத்துறை மூலம் அனுமதி வழங்கியது.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 சிவப்பு ரகம் அடங்கிய எள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் டெண்டர் முறையில் நடைபெற்ற ஏலத்தில் சிவப்பு ரக எள் அதிகபட்சமாக ரூ.104.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.100.65- க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 16 ஆயிரத்து 236 தேங்காய்களும் கொண்டு வரப்பட்டு டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.15.65-க்கும், ஏலம் விடப்பட்டது. மேலும் 59 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 17 சிவப்பு ரக எள் மூட்டைகள் குறைவாகவும் மற்றும் 4 ஆயிரத்து 370 தேங்காய்களும், 15 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் ஒரு கிலோவிற்கு ரூ.2.15 கூடுதலாகவும், தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.2.60ம், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.3.85 குறைவாகவும் விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 வார காலமாக ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்ட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 8 டன் அளவில் மொத்தம் ரூ‌.2 லட்சத்து 87 ஆயி–ரத்து 642-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

    இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    ×