search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police stations"

    • புறநகர் போலீஸ் நிலையங்கள் மாநகர கட்டுப்பாட்டில் வருவதால், சிட்டி பகுதியில் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர்

    வடவள்ளி,

    கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குள் துடியலூர், வடவள்ளி போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதட்ட சூழ்நிலை நிலவிய போது மாநகரப் பகுதியில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் தொடங்க வேண்டும் என மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து கோவை சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாவட்ட போலீஸ் எல்லைக்குள் வரும் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மாநகர போலீசுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

    அதன்படி நேற்று முதல் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களும் மாநகர போலீஸ் துறை வசம் சென்றது. இந்த போலீஸ் நிலையங்கள் இனி மாநகர போலீசுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியானது.

    வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர். வடவள்ளி இன்ஸ்பெக்டர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இருப்பார். மாநகர போலீசார் வசம் வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றுள்ளதால், அவர்கள் வருகிற திங்கட்கிழமைக்குள் தங்கள் பணியை முழு வீச்சில் தொடங்குவார்கள் என தெரிகிறது.சட்டம் ஒழுங்குக்கு ஒரு இன்ஸ்பெக்டர், குற்ற சம்பவங்களுக்கு ஒரு இன்ஸ்ெபக்டர் என 2 பேர் விரைவில் பணியை தொடங்க உள்ளனர். இதனால் வடவள்ளி பகுதியில் கூடுதல் காவலர்கள் பணியமற்றப்பட்டு மாநகர காவல் வசம் வர உள்ளது. இதனால் குற்றசம்பங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை வடவள்ளி போலீஸ் நிலைய பகுதிக்குளு இருந்த வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது.

    இதுதவிர வடவள்ளி பகுதி வார்டு எண் 36,37,38,39,40 வார்டுகளுடன் சோமை யம்பாளையம், மருதமலை, வீரகேரளம், பேரூர அருகே உள்ள ஆண்டிபாளையம் ஆகியவவை தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு செல்கிறது.

    இதேபோல், துடியலூர் போக்குவரத்து போலீஸ் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாநகர் போலீசில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி துடியலூர் போக்குவரத்து போலீசார் ஆர்.எஸ் புரம் போக்குவரத்து போலீஸ் பிரிவுடனும், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துடனும் இணைந்து செயல்பட உள்ளது. புறநகர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டதால் மாநகரின் எல்லை மற்றும் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து போலீஸ்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்த டெண்டர் விட்டது.

    புதுச்சேரி:

    நாட்டின் அனைத்து போலீஸ்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    புதுவை அரசும் இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்த டெண்டர் விட்டது.

    முதல்கட்டமாக உருளையன்பேட்டை, ஓதியஞ்சாலை போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் பிற போலீஸ்நிலையங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.

    போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கேமரா பதிவுகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பார்க்க முடியாது. கேபிள் வழியாக சீனியர் எஸ்.பி. மற்றும் போலீஸ் சித்ரவதைக்கு எதிரான கமிட்டி அலுவலகத்தில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மத்திய அரசு குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
    • இந்த ஆய்வின்போது பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உடன் இருந்தார்.

    பெருந்துறை:

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள போலீஸ் நிலை யங்களில் மத்திய அரசு சார்பில் ஆய்வு செய்து, சிறந்த போலீஸ் நிலையங்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    இதேபோல் தமிழக அரசு சார்பிலும் ஆய்வு செய்ய ப்பட்டு சிறந்த போலீ்ஸ் நிலையங்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி மத்திய அரசு கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுக்க 110 போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் அக்குழு ஆய்வு செய்தது. தொடர்ந்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மத்திய அரசு குழுவின் அதிகாரிகளான மகேந்திரன், கணேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், கணினி மூலம் குற்றப்பதிவேடுகளை பதிவேற்றம் செய்வது (சிசிடிஎன்எஸ்), போலீஸ் நிலையத்தில் பொது மக்களை வரவேற்கும் முறை, போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்கும் விதம், போலீசார் சீருடை அணிந்த விதம், தினசரி நடப்பு நிகழ்வுகள் மேற்கொள்ளும் விதங்களை அக்குழுவினர் மதிப்பீடு செய்தனர்.

    இந்த மதிப்பீட்டின் அறிக்கையை மத்திய அரசு க்கு சமர்பித்த பின்னர், மாநிலங்கள் வாரியாக அதிக மதிப்பெண் பெறும் போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த போலீஸ் நிலையம் என்ப தற்கான விருது வழங்க ப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உடன் இருந்தார்.

    • காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆலோசனைக்கூட்டம் குயவர் பாளையத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது.
    • புதுவை ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க ஆலோசனைக்கூட்டம் குயவர் பாளையத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளரும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க புதுவை ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தமிழ்நாடு-புதுவை ஒருங்கிணைப்பாளர் ஆசீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் திராவிட கழக மாவட்ட தலைவர் அன்பரசன், இந்திய கம்யூனிஸ்டு தினேஷ் பொன்னையா, மே 17 இயக்கம் மதிவாணன், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, புதுவை தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் டி.வி.நகர் ராஜா, மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது.

    போலீஸ் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே வழங்க வேண்டும்.

    புதுவையில் இயங்கி வந்த காவல் புகார் ஆணையம் வருடாந்திர கூட்டங்களை நடத்தி அதன் அறிக்கையை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

    வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் முதன்முறையாக மதுரை போலீஸ் நிலையங்களில் சுழலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கலாம்.

    மதுரை

    போலீஸ் நிலையம் சென்றால் புகார் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

    இதனை களையும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ''கிரேட்'' திட்டம் (குறைபாடுகள் களைதல் மற்றும் கண்காணித்தல்) அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனை மாநகர ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதன்படி மதுரை மாநகரில் உள்ள 25 போலீஸ் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில், கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை உருவாக்கப்பட்டு, அங்கு 360 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில், ஆடியோ பதிவுடன் கூடிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதனை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கலாம்.

    போலீஸ் நிலையத்திற்கு வருபவரிடம், மனுதாரர் எந்த காரணத்துக்காக வந்துள்ளார்? அவரது பெயர், தேதி, நேரம், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வரவேற்பாளர் பெற்று அதனை ''கிரேட்'' இணையதளத்தில் பதிவிடுவார்.

    அதன் பிறகு கமிஷனர் அலுவலக கிரேட் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட புகார்தாரரை தொடர்பு கொண்டு புகாரின் தன்மை, போலீசாரின் விருந்தோம்பல் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்பார். இது போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் மனுவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, புகார்தாரரிடம் அத்துமீறி நடந்து கொண்டாலோ சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் கிரேட் அலுவலர்கள், இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கிரேட் திட்டம், காவல் நிலை யங்களில் பொதுமக்கள் நல்ல முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்யவும், குறைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், தேவையற்ற காத்திருப்பை தவிர்க்கவும் உதவும் வகையில் அமையும்.

    இது தொடர்பாக மேலும் தகவல்கள் தெரிவிக்க விரும்பினால், 0452-2520760 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தரலாம்" என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

    மதுரை மாநகர காவல்துறையின் கிரேட் திட்டம், காவல் நிலைய ங்களின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி போலீஸ் நிலையங்களில் 469 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    நெல்லை:

     நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் 369 இருசக்கர வாகனங்கள், சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்தில் 100 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அரசிற்கு ஆதாயம் பெறும் பொருட்டு யாரும் உரிமை கோராத நிலையில் உள்ள இரு சக்கர வாகனங்கள் அரசின் வழிமுறைகளுக்குட்பட்டு வருகிற 16-ந் தேதி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைத்திலும், 17-ந் தேதி சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்திலும் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிவகாசி பகுதியில் 6 போலீஸ் நிலையங்களில் கடந்த ஆண்டு மொத்தம் 3653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    சிவகாசி:

    சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி. அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் 920 வழக்குகளும், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் 1318 வழக்குகளும், திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் 914 வழக்குகளும், மாரனேரியில் 240 வழக்குகளும், எம்.புதுப்பட்டியில் 249 வழக்குகளும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் என மொத்தம் 3653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 11 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். அதே போல் 11 கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றது. இதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 7 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 16 இடங்களில் வீடு புகுந்து திருட்டு சம்பவம் நடைபெற்றது. மேலும் 22 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 51 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் 40 பேர் திரும்பி வந்தனர். இதுவரை திரும்பி வராமல் உள்ள 11 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வாகனங்கள் அதிகம் கொண்ட சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 108 சாலை விபத்துகள் நடைபெற்றது. இதில் 27 பேர் பரிதாபமாக இறந்தனர். 108 பேர் படுகாயம் அடைந்தனர். போக்குவரத்து விதிகள் மீறியதாக 67,007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள கருணாஸ் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவ சான்றுகள் காவல்நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #KarunasMLA #KarunasHospitalized
    சென்னை:

    நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு மற்றும் ஐபிஎல் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் ஆஜராகி  கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


    தற்போது மருத்துவமனையில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டிருப்பதால், காவல் நிலையங்களுக்கு கையெழுத்திட செல்லவில்லை. எனவே, அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கருணாசின் மருத்துவச் சான்றுகளை வழங்கினர்.

    இதுபற்றி அவரது வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில்,  ‘கருணாஸ் நேற்று இரவு முதலே நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திடவில்லை’ என்றார்.

    இதற்கிடையே 2017ம் ஆண்டு நெல்லையில் தேவர் பேரவை நிர்வாகியின் காரை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக கருணாசிடம் விசாரணை நடத்துவதற்காக நெல்லை போலீசார் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #KarunasMLA #KarunasHospitalized
    குழந்தைகள் கடத்தப்பட்டால் மாயம் என்று வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
    சென்னை:

    குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாயமானதாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறினர்.



    நீதிபதிகள் வழங்கிய உத்தரவை அரசு வக்கீல் ஆர்.ரவிச்சந்திரன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அலுவல் ரீதியாக தெரிவித்தார். இதையடுத்து டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அதில் அவர், ‘குழந்தைகள் மாயமானதாக புகார்கள் கொடுக்கும்போது, நேரடியாக கடத்தல் புகார் கொடுக்கப்பட்டாலும் போலீசார் வழக்கமாக காணவில்லை என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். இனிமேல் காணாமல் போன சம்பவங்களின்போது நேரடி கடத்தல் புகார்கள் பெறப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 363 அல்லது 366 (ஏ) பிரிவுகளின் கீழ் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளார். 
    ×