search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arvind Swami"

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் சித்ரா - வரதன் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. #CCV
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதன்படி அரவிந்த்சாமி வரதன் என்ற கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு எதி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    தற்போது டயானா, சாயா என்ற கதாபாத்திரத்திலும், ஜோதிகா சித்ரா என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறித்துள்ளது. இதில் டயானாவும் சிம்புவும் ஜோடியாக சாயா - எதி என்ற போஸ்டரை நேற்று வெளியிட்டார்கள். இன்று ஜோதிகா, அரவிந்த் சாமி ஜோடி சித்ரா - வரதன் போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.



    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV
    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள நான்கு நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகிய நிலையில், அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதன்படி அரவிந்த்சாமி வரதன் என்ற கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு எதி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில், படத்தின் போஸ்டர் நாளை காலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV
    ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நட்சத்திரங்களின் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் 4 நட்சத்திரங்களின் 4 முதற்பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV

    அரவிந்த்சாமி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாரகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ArvindSwami
    `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கு பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் அடுத்ததாக `சதுரங்க வேட்டை-2', `நரகாசூரன்' மற்றும் `செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கிறது. 

    அரவிந்த் சாமி தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அவரது அடுத்த படத்தை `என்னமோ நடக்குது', `அச்சமின்றி' போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கவிருக்கிறார். செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

    படத்தில் பங்குபெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #ArvindSwami
    ×