என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Apps"
- வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
- புதிய க்ரூப் வீடியோ கால் அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால்களில் அதிகபட்சம் 32 பேருடன் பேச முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பயனர்களால் அதிகபட்சம் 7 பேருடன் மட்டுமே க்ரூப் வீடியோ கால் பேச முடிந்தது. தற்போது 32 பேருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, வீடியோகால் ஏற்கனவே துவங்கி இருப்பது அவசியம் ஆகும்.
தற்போது வாட்ஸ்அப்-இல் வெளியாகி இருக்கும் அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் வீடியோ கால்-ஐ மேற்கொள்ளும் போதே அதிகபட்சம் 15 பேருடன் உரையாட முடியும். இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 வெர்ஷன்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்த துவங்கலாம். பீட்டா வெர்ஷனில் இருப்பதால், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். வாட்ஸ்அப்-இல் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது தான். வாட்ஸ்அப் செயலியில் கால்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்து, க்ரியேட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
இனி க்ரூப் வீடியோ கால் ஆப்ஷனில் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் தற்போது உங்களால் அதிகபட்சம் ஏழு பேரை, கால் துவங்கும் முன் சேர்க்க முடியும். கால் துவங்கியதும், அதிகபட்சம் 32 பேரை இணைத்துக் கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
- அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- வியாபார ரீதியில் வாட்ஸ்அப்-ஐ சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கி இருக்கிறது.
இது குறித்து Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் குறுந்தகவல் அனுப்ப வேண்டிய அனைத்து நம்பர்களையும் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்த பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து சர்ச் பாரில் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நம்பர் உங்களது பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தேடும். அதன்பிறகு கான்டாக்ட் லிஸ்ட் வெளியிலும் தேடும்.
தற்காலிகமாக அறிமுகமில்லா நபர்களுக்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயனர்கள் முன்னதாக அந்த நம்பர்களை மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். ஆனால், புதிய வசதி மூலம் பயனர்கள் மொபைல் நம்பர்களை சேவ் செய்யாமலும், குறுந்தவல் அனுப்பிடலாம்.
வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்-ஐ அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும். இது பீட்டா பயனர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
- திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக உருவாக்கி இருக்கும் புதிய செயலி தான் திரெட்ஸ். இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதலே அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது.
தற்போது திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறி, இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் டைரக்ட் மெசேஜ்களை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று முன்னதாக தெரிவித்து இருந்தார். சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்து இருக்கும் என்று தெரிகிறது. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
- விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.
டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.
பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.
இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.
விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அம்சம் ஸ்டிக்கர் சஜெஷன் என்று அழைக்கப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
2018 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கும் ஸ்டிக்கர்களை இம்போர்ட் செய்து பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு செய்து குறிப்பிட்ட எமோஜிக்களை பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப்-இல் வழங்கப்படும் புதிய ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பீட்டா அப்டேட்-இல் புதிய ஸ்டிக்கர் டிரே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படும். இந்த டிரே-இல் எமோஜியுடன் தொடர்புள்ள ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் பயனர்கள் சூழலுக்கு ஏற்ற சரியான ஸ்டிக்கர்-ஐ தேர்வு செய்து அனுப்ப முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பில்ட்-இன் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து கப்பி (Cuppy) ஸ்டிக்கர் பேக்-ஐ டவுன்லோடு செய்து, சாட் பாரில் எமோஜியை டைப் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டிக்கர் சஜெஷன் மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலியில் வழங்குவதற்கு பல்வேறு புதிய அம்சங்களை டெஸ்டிங் செய்து வருகிறது.
- சாட் ஹிஸ்ட்ரியை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்க வேண்டியது அவசியம் ஆகும்.
வாட்ஸ்அப் செயலியில் சாதனங்கள் இடையே சாட் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதனை செய்துமுடிக்க ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த நிலையில், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்கவேண்டியது அவசியம் ஆகும்.
கடந்த சில மாதங்களாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சாட்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?
- இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் கொண்டிருப்பது, வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- சாட் டிரான்ஸ்பர் செய்ய லொகேஷன் எனேபில் செய்யப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும்.
- பழைய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாட் -- சாட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
- புதிய ஸ்மார்ட்போன் மூலம், பழைய ஸ்மார்ட்போனின் திரையில் காணப்படும் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இனி சாட்-களை தேர்வு செய்து அனுப்பலாம்.
- டிரான்ஸ்பர் ஆக வேண்டிய புதிய ஸ்மார்ட்போனில் தகவல்களை பெறுவதற்கு Accept ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி சாட் டிரான்ஸ்பர் முடிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாட் டிரான்ஸ்பர் வசதி இரு சாதனங்களிடையே நடைபெறுகிறது. சாட் டிரான்ஸ்பின் போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிக ஃபைல் சைஸ் கொண்ட தரவுகளை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டிக்டாக் சேவையிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னணி சமூக வலைதள சேவைகளில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்ஸ்டாகிராம் தனது பனர்களுக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு மற்றும் ஷேர் செய்யும் வசதியை வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புதிய அம்சம் பற்றிய தகவலை தனது பிராட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ நேரடியாக தங்களது சாதனத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு ஷேர் ஐகான் மற்றும் டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் தெய்தாலே போதுமானது.
புதிய அம்சம் பயனர் உருவாக்கும் தரவுகளின் மீது அதிக கண்ட்ரோல் வழங்குவதோடு, இன்ஸ்டாகிராம் தளத்தில் உருவாக்கும் தரவுகளை கொண்டாட வழி செய்கிறது. நிறுவனங்கள் சார்பில் வீடியோக்களை நேரடியாக டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்படுவதால், இதே போன்ற வசதி மற்ற தளங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு செய்யும் வசதி பொது அக்கவுன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பொது அக்கவுண்ட்களில் டவுன்லோடு செய்யக் கோரும் வசதியை செயலிழக்க செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. டவுன்லோடு செய்யப்படும் ரீல்ஸ்-இல் வாட்டர்மார்க் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
முன்னதாக டிக்டாக் செயலியும் இதேபோன்ற வசதியை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் வீடியோக்களில் டிக்டாக் லோகோவுடன் மற்றவர்களுக்கு பகிரப்படும். இது டிக்டாக்கிற்கு விளம்பரமாக அமைகிறது.
- வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தடுக்கும் வசதி வழங்கப்படுகிறது.
- புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் பயனர்களை தொந்தரவு செய்யாது. எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் மற்றும் கால்ஸ் டேபில் அழைப்பு விவரம் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும். புதிய அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் பிரைவசி செக்கப்:
பெயருக்கு ஏற்றார்போல் புதிய வாட்ஸ்அப் பிரைவசி செக்கப் அம்சம் கொண்டு செயலியில் கிடைக்கும் பிரைவசி செட்டிங்களை இயக்க வழி செய்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள பிரைவசி செக்கப் ஆப்ஷனில், ஸ்டார்ட் செக்கப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பிரைவசி செட்டிங் நிறைந்த மெனு திரையில் காணப்படும்.
இதில் யார் உங்களை தொடர்பு கொள்ள முடியும், தனிப்பட்ட விவரங்களை கட்டுப்படுத்துவது, சாட் பிரைவசி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். பல்வேறு வகையான பிரைவசி செட்டிங்களை ஒரே பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக புதிய பிரைவசி செக்கப் உள்ளது.
- சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது.
- வீடியோ மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்ய முடியாது.
வாட்ஸ்அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. மெசேஜ் டைப் செய்ய முடியாதவர்களுக்கு, ஆடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வந்தது. புதிய அப்டேட் மூலம் இனி ஆடியோ மெசேஜை கடந்து வீடியோ மெசேஜ்களையும் அனுப்ப முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக எடிட் பட்டன், சாட் லாக், ப்ரோஃபைல் படத்தை சிலருக்கு மட்டும் மறைத்து வைக்கும் வசதி, மல்டி-போன் சப்போர்ட் உள்ளிட்டவை விரைந்து வெளியிடப்பட்டன.
தற்போது வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 23.12.0.71 வெர்ஷன், ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.13.4 வெர்ஷனில் புதிய வீடியோ மெசேஜ் அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. ஆடியோ மெசேஜ் போன்றே புதிய வீடியோ மெசேஜ் அம்சத்தையும் எளிதில் இயக்க முடியும். ஒவ்வொரு சாட்களிலும் மைக்ரோபோன் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே வீடியோ ஐகான் இடம்பெறுகிறது. இதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ மெசேஜ் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மற்ற தரவுகளை போன்றே, வீடியோ மெசேஜ்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. அந்த வகையில் யாரும் வீடியோ மெசேஜ்களை பார்க்க முடியாது. வீடியோ மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் வசதி வழங்கப்படாது. எனினும், இதனை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யப்படுவதை வாட்ஸ்அப் தடுக்காது.
Photo Courtesy: wabetainfo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்