search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anushka Sharma"

    • விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் ஜேஸ்வால் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது கோலியின் கால் சுளுக்கியது போல ஓடினார். அதனை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா கூறினார்.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தனர்.

    ஆஸ்திரேலிய அணிவுடனான 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.


    இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த ஒரு நாள் கழித்து இன்று அவர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

    நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

    • விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
    • அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

    தம்பதிகள் சுவாமி தயானந்த கிரி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அனுஷ்காவும் விராட்டும் ஆசிரமத்தில் வழிபடுவது போன்ற பல படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அங்கு வந்த ரசிகர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டனர்.


    விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஆசிரமத்தில் நடைபெறும் பொது மதச் சடங்குகளில் பங்கேற்று பின்னர் பண்டாரா (மத விருந்து) ஏற்பாடு செய்தார்கள் என்று கூறப்படுகிறது.

    விராட் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் விருந்தாவனத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஆசி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஆஸ்திரேலியா அணி சில நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 என்று பிரபலமாக அறியப்படும் இந்தத் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிப்பதில் இன்றியமையாததாக இருக்கும்.

    தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நாக்பூரிலும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 17-ம் தேதி மும்பையிலும் தொடங்குகிறது.

    • தனது அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
    • தற்போது பூமா இந்தியா நிறுவனத்துடன் அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார்.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


    பூமா இந்தியா நிறுவனம் பதிவு

    இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அனுஷ்கா சர்மா பதிவு

    தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது பூமா நிறுவனத்துடன் நடிகை அனுஷ்கா சர்மா கைக்கோர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



    • நடிகை அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


    பூமா நிறுவனம் பதிவு

    இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அனுஷ்கா சர்மா பதிவு

    தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு கண்டன குரல் எழுப்பியுள்ளார்.

    • கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறையை சிலர் படம் பிடித்து வீடியோ வெளியிட்டனர்.
    • இதனை கண்டிக்கும் வகையில் நடிகை அனுஷ்கா ஷர்மா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டுள்ளார். மேலும், தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.


    அனுஷ்கா ஷர்மா பதிவு

    விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா" என குறிப்பிட்டுள்ளார்.

    • என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
    • கடினமாக ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாக அவர் வந்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலியின் அதிரடி ஆட்டமே காரணம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விராட் கோலி இந்த போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் கோலியின் ஆட்டத்தை அவரது மனைவி அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தமது இன்ஸ்ட்ரகிராம் வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

    நீங்கள் அழகு! அசத்தும் அழகு!! இன்றிரவு மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்! நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்... என் அன்பே. உங்களின் மன உறுதியும், நம்பிக்கையும் மனதைக் கவரும்! என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

    அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நம் மகள் மிகவும் சிறியவளாக இருந்தபோதிலும், அவளுடைய அப்பா அன்று இரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் வெளியே வந்தார். உன்னை நினைத்து பெருமை படுகிறேன். உங்கள் வலிமை மிக சிறந்தது. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். #HappyNewYear2019 #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மெல்போர்ன் டெஸ்ட் நேற்று முடிவடைந்தது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி சிட்னி சென்றுள்ளது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவது மனைவி அனுஷ்கா ஷர்மாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இன்று அவர்கள் சிட்னியில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘இந்தியா மற்றும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். சிறப்பான ஆண்டாக அமைய கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    சிங்கப்பூர் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds
    சிங்கப்பூர்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன. 

    இதேபோல், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச்  சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட வருபவர்கள் தங்களது மனம் கவர்ந்த பிரபலத்தின் சிலை அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுண்டு.

    சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், இங்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை இன்று திறக்கப்பட்டது.

    இந்த மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த கைபேசியும் இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள கைபேசி மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AnushkaSharma #MadameTussauds #SingaporeMadameTussauds
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
    வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

    வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.

    "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.



    'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

    'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
    ஆட்டநாயகன் விருதுக்குரிய எனது இரு இன்னிங்சையும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார். #ViratKohli
    இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்டில் 97, 103 ரன்கள் வீதம் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஆட்டநாயகன் விருதுக்குரிய எனது இரு இன்னிங்சையும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எனக்கு நிறைய உத்வேகம் அளிக்கிறார். தொடர்ந்து அளித்துக் கொண்டு இருக்கிறார். எத்தகைய சூழலிலும், ‘நம்மால் முடியும் மனம் தளரக்கூடாது’ என்று எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளிப்பவர் அவர் மட்டுமே. இந்த பாராட்டுக்கு அவர் தகுதியானவர்’ என்றார்.  #ViratKohli

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் இருக்கும் குரூப் போட்டோவில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம் பெற்றுள்ளது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. #ViratKohli #AnushkaSharma #TeamIndia
    லண்டன்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. 

    இறுதியாக ஒட்டுமொத்த அணியும், தூதரக கட்டிடத்திற்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டது. இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் போஸ் கொடுத்தார். 

    இந்த போட்டோவை கண்ட ட்விட்டர் வாசிகள், அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணியில் ஒருவரா? அவர் ஏன் இந்திய அணியுடன் புகைப்படத்திற்கு போஸ் தருகிறார். பிசிசிஐ இதனை எப்படி அனுமதித்தது? மற்ற வீரர்களின் மனைவிகள் எங்கே? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

    ஏற்கனவே வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ×